தியாகத் திருநாள் வந்தது.. நம்மை நல்லிணக்கத்தோடு வாழச் செய்தது…..!!! 21-06-2024
தியாகத் திருநாள் வந்தது.. நம்மை நல்லிணக்கத்தோடு வாழச் செய்தது…..!!! ✍🏻 அன்புள்ளவர்களே ! அல்லாஹ்வின் ﷻ பேரருளால் [ ذو الحجة ] துல்ஹஜ் மாதத்தின் மூன்றாம் வார ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ் . ✍🏻 அன்புள்ளவர்களே ! போன வாரம் சிறப்பான முறையில் தியாக் திருநாளை [ عيد الاضحى] கொண்டாடினோம். அந்நாள் போல் எந்நாளும் அல்லாஹ் நம்மை மகிழ்ச்சியாக வைப்பானாக! ஆமீன். كلُّ عام وأنتم بخير، تقبَّل الله منَّا ومنكم صالح الأعمال ✍🏻 அன்புள்ளவர்களே ! அன்றாட வாழ்வில் மனிதன் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறான். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுடன் சில வேளை அவனுக்குப் பிரச்சனைகள் எழுகிறது. ஒரே தெருவில் வசிக்கின்ற அண்டை வீட்டாருடனும் சில பிரச்சனைகளை அவன் சந்திக்க நேரிடுகிறது. நெருங்கிப் பழகும் நண்பர்கள், நம்மிடம் வியாபாரம் செய்யும் நுகர்வோர் இன்னும் இது போன்று பலதரப்பட்டவர்களிடம் அடிக்கடி பிரச்சனைகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இந்நேரங்களில் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்காக யாரும் முன் வராவிட்டால் சில நேரங்களில் தன்னுடைய சுய நினைவை இழந்து ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று கூட சிந்திக்