Posts

விடுமுறைக்குப் பின் 05-06-2026

 இ بسم الله الرحمن الرحيم   விடுமுறை முடிந்து பள்ளிகள் ஆரம்பம்-  மாணவர்களுக்கு சில அறிவுரைகள் பள்ளிக்கூட விடுமுறை நாட்கள் முடிந்து ஸ்கூல் துவங்கியுள்ள நிலையில் மாணவர்களுக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு  சில அறிவுரைகள் கூறுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.  1. பள்ளிப் படிப்பும் அவசியம். எனினும் அதை விட அவசியம் மதரஸா படிப்பு. அதற்கு சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.  2. அதுபோல் என்ன தான் ஸ்கூலில் அதிகமான home work  தந்திருந்தாலும் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதை மறந்து விடக்கூடாது.  3. ஜும்ஆவின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். மாணவர்களுக்கு பெரும்பாலும் ஜும்ஆ கிடைப்பதில்லை. சம்பந்தப் பட்ட பெற்றோர் ஸ்கூல் நிர்வாகத்திடம் பேசி குறைந்த பட்சம் ஸ்கூலில் ஜும்ஆ தொழ ஏற்பாடு செய்ய வேண்டும்.  4. ஒவ்வொரு மஸ்ஜிதிலும் மக்தப் மதரஸாவுடன் இணைந்து சிறந்த ஆசிரியர் மூலமாக ஸ்கூல் டியூஷன் ஏற்பாடு செய்தால் டியூஷனை காரணம் காட்டி பிள்ளைகள் தொழுகையை விடுவதையும் மதரஸாவுக்கு வராமல் இருப்பதையும் சீர் செய்ய முடியும்.  5.வசதியுள்ளவர்கள் நிறைந்த மஹல்லாக்களில் மஸ்ஜிதுடன் இணைந்...

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

Thursday, November 27, 2025 சிறந்தவர்களில் சிறந்தவர் சித்தீகுல் அக்பர் (ரலி)   இஸ்லாமிய வரலாற்றின் பொற்காலத்தை அலங்கரிக்கும் நபர்களில் மிக உயர்ந்த இடத்தைப் பெறுபவர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள். உலகில் தோன்றிய மானுடர்களில் நபி முகம்மது (ஸல்) அவர்களுக்கு அடுத்தபடியாக சிறந்தவராகத் திகழ்ந்தவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. நபி (ஸல்) அவர்களின் வசனங்களிலும், சஹாபாக்களின் வாக்குமூலங்களிலும், உலமாக்களின் நூல்களிலும் அபூபக்கர் (ரலி) அவர்களின் சிறப்பு தெளிவாகத் தோன்றுகிறது.  ஈமானில் உறுதியும், தியாகத்தில் உன்னதமும், தாழ்மையில் உச்சமும், உண்மையில் உறுதியும் என அனைத்து நற்குணங்களையும் தன்னகத்தே ஒருங்கே கொண்டவர்கள் அபூபக்கர் (ரலி). இஸ்லாமின் ஆரம்பகாலத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஆதரவாக நின்ற முதல் நபர்களில் ஒருவராகவும், அவரையடுத்த கலீபாவாகவும், இஸ்லாமிய உலகை நிலைநிறுத்திய தலைவராகவும் மதிக்கப்படுகிறார். அவரின் ஒவ்வொரு செயலிலும் உண்மையுடனும் ஈகையுடனும் நிரம்பிய அன்பையும் தாழ்மையையும் காணலாம். அவர் பெற்ற சிறப்பு, பதவி, புகழ் ஆகியவை அவருடைய ஐயமற்ற உண்மைத்தன்மை, அல்லாஹ் மீதான ஆழ்ந்த நம்பிக்...

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

Thursday, 30 October 2025 எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் நரகத்தில் சேர்த்து விடும்!!!   எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் நரகத்தில் சேர்த்து விடும்!!! மனித வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் ஒரு இறைநம்பிக்கையாளன் சிறந்து விளங்கும் வகையிலான வாழ்க்கையை வாழ்ந்திட அல்லாஹ்வும் ,  மாநபி  ﷺ  அவர்களும் மிகச் சிறந்த வழிகாட்டலை வழங்கி இருக்கிறார்கள். மேலும் ,  அல்லாஹ்வும் ,  மாநபி  ﷺ  அவர்கள் கூறும் வாழ்வியல் முறை என்பது இறைவனின் நெருக்கத்தைப் பெற்றுத்தரவல்லதாகவும் ,  அதன் மூலம் நாளை மறுமையில் சொர்க்கப் பிரவேசத்தை பரிசில் பெறுவதாகவும் , இறைவனின் கோபத்தை விட்டும் தூரமாக்கி வைக்கக் கூடியதாகவும் இருக்கும் என்ற அடிப்படை விதியைக் கொண்டதாக அமைந்திருக்கும். அதே போன்று அல்லாஹ்வும் ,  மாநபி  ﷺ  அவர்களும் ஒரு இறைநம்பிக்கையாளன் தம்முடைய வாழ்க்கையில் அவனுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்குகிற ,  இறைக் கோபத்தைப் பெற்றுத்தருகிற ,  நரகத்தை பரிசளிக்கிற செயல்பாடுகள் குறித்தும் எச்சரித்து இருக்கின்றார்கள். قُلْ نَارُ جَهَنَّمَ أَش...