Posts

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

Thursday, November 27, 2025 சிறந்தவர்களில் சிறந்தவர் சித்தீகுல் அக்பர் (ரலி)   இஸ்லாமிய வரலாற்றின் பொற்காலத்தை அலங்கரிக்கும் நபர்களில் மிக உயர்ந்த இடத்தைப் பெறுபவர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள். உலகில் தோன்றிய மானுடர்களில் நபி முகம்மது (ஸல்) அவர்களுக்கு அடுத்தபடியாக சிறந்தவராகத் திகழ்ந்தவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. நபி (ஸல்) அவர்களின் வசனங்களிலும், சஹாபாக்களின் வாக்குமூலங்களிலும், உலமாக்களின் நூல்களிலும் அபூபக்கர் (ரலி) அவர்களின் சிறப்பு தெளிவாகத் தோன்றுகிறது.  ஈமானில் உறுதியும், தியாகத்தில் உன்னதமும், தாழ்மையில் உச்சமும், உண்மையில் உறுதியும் என அனைத்து நற்குணங்களையும் தன்னகத்தே ஒருங்கே கொண்டவர்கள் அபூபக்கர் (ரலி). இஸ்லாமின் ஆரம்பகாலத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஆதரவாக நின்ற முதல் நபர்களில் ஒருவராகவும், அவரையடுத்த கலீபாவாகவும், இஸ்லாமிய உலகை நிலைநிறுத்திய தலைவராகவும் மதிக்கப்படுகிறார். அவரின் ஒவ்வொரு செயலிலும் உண்மையுடனும் ஈகையுடனும் நிரம்பிய அன்பையும் தாழ்மையையும் காணலாம். அவர் பெற்ற சிறப்பு, பதவி, புகழ் ஆகியவை அவருடைய ஐயமற்ற உண்மைத்தன்மை, அல்லாஹ் மீதான ஆழ்ந்த நம்பிக்...

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

Thursday, 30 October 2025 எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் நரகத்தில் சேர்த்து விடும்!!!   எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் நரகத்தில் சேர்த்து விடும்!!! மனித வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் ஒரு இறைநம்பிக்கையாளன் சிறந்து விளங்கும் வகையிலான வாழ்க்கையை வாழ்ந்திட அல்லாஹ்வும் ,  மாநபி  ﷺ  அவர்களும் மிகச் சிறந்த வழிகாட்டலை வழங்கி இருக்கிறார்கள். மேலும் ,  அல்லாஹ்வும் ,  மாநபி  ﷺ  அவர்கள் கூறும் வாழ்வியல் முறை என்பது இறைவனின் நெருக்கத்தைப் பெற்றுத்தரவல்லதாகவும் ,  அதன் மூலம் நாளை மறுமையில் சொர்க்கப் பிரவேசத்தை பரிசில் பெறுவதாகவும் , இறைவனின் கோபத்தை விட்டும் தூரமாக்கி வைக்கக் கூடியதாகவும் இருக்கும் என்ற அடிப்படை விதியைக் கொண்டதாக அமைந்திருக்கும். அதே போன்று அல்லாஹ்வும் ,  மாநபி  ﷺ  அவர்களும் ஒரு இறைநம்பிக்கையாளன் தம்முடைய வாழ்க்கையில் அவனுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்குகிற ,  இறைக் கோபத்தைப் பெற்றுத்தருகிற ,  நரகத்தை பரிசளிக்கிற செயல்பாடுகள் குறித்தும் எச்சரித்து இருக்கின்றார்கள். قُلْ نَارُ جَهَنَّمَ أَش...

மேம்பட்ட முஹல்லா எது ?

THURSDAY, 17 APRIL 2025 மேம்பட்ட மஹல்லா எது?, பாகம் 1   மேம்பட்ட   மஹல்லா   எது ?,  பாகம்  1 வானுயர்ந்த மினாராக்கள் ,  முழுவதும் குளிரூட்டப்பட்ட மஸ்ஜித் ,  நுழைவாயில் முதல் டாய்லெட் வரை மார்பிள்ஸ் மயம் ,  எண்ணிக்கையில் அடர்ந்த பணியாளர்கள் ,  லட்சத்தை தொட்டு நிற்கும் மாதந்திர செலவுகள் ,  செல்வாக்கும் ,  பாரம்பரியமும் அடையாளமும் கொண்ட நிர்வாகிகள் இது தான் இன்றைய மேம்பட்ட "மஹல்லாவின்" அடையாளங்களாக நம்மில் பலரும் பெருமையுடன் சொல்லிக் கொள்வது. உண்மையில் ஒரு மேம்பட்ட மஹல்லாவிற்கான அடையாளங்கள் இவை மட்டும் தானா ?  என்று கேட்டால் ஒரு மேம்பட்ட மஹல்லாவின் அடையாளங்களில் இவைகள் ஒரு பகுதி மட்டுமே என்று தான் பதில் சொல்ல முடியும். ஏனெனில் ,  மாநபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய மஹல்லாவான மதீனா தான். ஒட்டுமொத்த உம்மத்துக்குமான முன் மாதிரி மஹல்லாவாகும். மாநபி (ஸல்) அவர்கள் மஸ்ஜித் அந் நபவீயை அடிப்படையாக வைத்து உருவாக்கிய முன் மாதிரி மஹல்லாவின் கட்டமைப்பு என்பது மதீனாவில் மாநபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த பத்தாண்டுகளிலும் பார்த்து பார்த்து கட்டமைக்கப்பட...