துன்பங்களைக் கண்டு துவண்டு விடாதே!!! 11-11-22
- Get link
- X
- Other Apps
அன்புள்ளவர்களே! அல்லாஹ்வின் ﷻ பேரருளால் [ ربيع الآخر ] ரபி[ع]உல் ஆகிர் மாதத்தின் மூன்றாம் வார ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.
அன்புள்ளவர்களே! அல்லாஹுத்தஆலா மனிதனை பளஹீனமாக படைத்துள்ளான். அவசரம், நோய், பசி, தாகம், தூக்கம் ஆசை என மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய பளஹீனங்களின் வரிசையில் துக்கமும், கவலையும் ஒன்று.
கவலை இல்லா மனிதன் உலகில் யார் இருக்கிறார்.?
இவ்வுலக வாழ்வில் கவலை, துக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எவருமில்லை. கவலைக்கான காரணங்கள் மனிதருக்கு மனிதர் மாறுபடலாமே தவிர கவலை இல்லா மனிதன் இங்கே கிடையாது. சிலருக்கு பணம் கவலையை தரலாம். வேறு சிலருக்கு பணமின்மை கவலையை தரலாம். சிலருக்கு கூட்டு வாழ்க்கை சிரமத்தை தரலாம். அதே சமயம் வேறு சிலருக்கு தனி வாழ்க்கை வெறுப்பை தரலாம். நோய், ரிஸ்க், மனைவி, மக்கள், தொழில் என மனிதனை கவலைகொள்ளச் செய்யும் விஷயங்கள் இங்கே ஆயிரமாயிரம் உண்டு.
இந்த துன்யாவில் மனிதன் எட்டு அத்தியாயங்களை கடந்தாக வேண்டும். இன்பம், துன்பம், கூடுதல், பிரிதல், இலேசு, கஷ்டம். ஆரோக்கியம், நோய் ஆகிய வைகள் என ஒரு அரபிக் கவிஞன் கூறினான்.
துக்கமே இல்லாத உலகம் அது சுவனலோகம் மட்டுமே. இதை பின் வரும் இறைவசனம் அற்புதமாக சுட்டிக்காட்டுகின்றது
وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنَّا الْحَزَنَ إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ) [فاطر:34]
எங்களை விட்டும் துக்கத்தை போக்கி வைத்த அந்த அல்லாஹ்வுக்கே! எல்லாப்புகழும், நிச்சயமாக எங்களின் ரப்பு மிக்க மன்னிப்பவன் நன்றியுள்ளவன் என்று சுவனத்தில் நுழைந்தவுடன் சுவனவாசிகள் கூறுவார்கள் என அல்லாஹ் [35:34] கூறுகின்றான்.
இந்த ஆயத்தை அடிப்படையாக கொண்டு அல்லாமா இப்ராஹீம் அத்தைமி [ரஹ்] அவர்கள் கூறும் போது- அல்லாஹ் எவருக்கு துக்கத்தை வழங்கவில்லையோ அவர் நரகத்தை அஞ்சட்டும், ஏனெனில் இவ்வுலகின் கவலை சுவனவாசிகளின் அடையாளமாகும் என்று கூறுகிறார்கள்.
عَنْ أَبِي سَعِيدِ نِ الخُدْرِيِّؓ وَأَبِي هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: يُنَادِي مُنَادٍ: إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلاَ تَسْقَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلاَ تَمُوتُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلاَ تَهْرَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلاَ تَبْأَسُوا أَبَدًا، فَذلِكَ قَوْلُهُ : (وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ۞). رواه مسلم
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அருளியதை ஹஜ்ரத் அபூஸஈதுல் குத்ரி ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள், “ஒரு அறிவிப்பாளர் சுவனவாசிகளே! நீங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள், இனிமேல் ஒருபோதும் நோய்வாய்ப்படமாட்டீர்கள், மரணமே வராத நிரந்தர வாழ்வு உங்களுக்காக தயாராக உள்ளது, முதுமையே வராத இளமை உங்களுக்கு காத்திருக்கிறது, என்றேன்றும் மகிழ்ச்சியே எக்காலமும் கவலையே இருக்காது’’ என்று அறிவிப்புச் செய்கிறார். இந்த ஹதீஸ் பின்வரும் குர்ஆன் வசனத்தின் விளக்கமாகும் (وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ) (முஸ்லிம்)
ஆக சுவர்கத்தில் மட்டுமே கவலையில்லாமல் வாழ முடியும். என்று மேற் கண்ட இறைமொழி, நபி மொழி நமக்கு தெளிவாக கூறுகிறது.
- ஆக மனித வாழ்கையில் ஏற்படும் துன்பங்களை மனிதன் எவ்வாறு அணுக வேண்டும். நமக்கு ஏற்படும் துன்பங்களை எப்படி துடைக்க வேண்டும் / இஸ்லாம் காட்டித்தரும் வழிகள் என்னென்ன என்பதனைப்பற்றி தெரிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும்
- பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும் , கேட்டதின் படி அமல் செய்யும் பாக்கியத்தை வல்ல நாயகன் ﷻ நம்மனைவருக்கும் தந்தருள்புரிவானாக! ஆமீன் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.
❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈
♣ அல்லாஹ் [ﷻ] திருமறையில் கூறுகின்றான்:-قال الله تعالى ♣
【துன்பங்களின் போது பொருமையாக இருப்பவருக்கு நபியே! நீர் நன்மாராயங் கூறுவீராக! 】
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். [2:153.]
وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:155)
الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَؕ
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். [2:156]
اُولٰٓٮِٕكَ عَلَيْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ
இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். [2:157]
♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- كما قال النبي صلى الله عليه وسلم ♣
【துன்பத்தை சகித்துக் கொள்வதின் மூலம் அல்லாஹ் [ﷻ] நமக்கு நன்மையை நாடுகிறான்…】
أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “” مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُصِبْ مِنْهُ “”
யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகின்றான். (புகாரி-5645)
【துன்பங்கள் / கவலைகள் நமக்கு வேண்டும். 】
【கவலையை உண்டாக்குமேயானால் நீர் முஃமின்!】
அன்புள்ளவர்களே! துன்பங்களும் / கவலைகளும் நமக்கு கொஞ்சம் வேண்டும். ஏனென்றால்;,
عَنْ أَبِي أُمَامَةَؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ سَأَلَهُ رَجُلٌ فَقَالَ: يَارَسُولَ اللّٰهِؐ مَااْلإِيمَانُ؟ قَالَ: إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ. رواه الحاكم
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “ஈமான் என்றால் என்ன?’’ என்று வினவினார். “உமது நற்செயல்கள் உம்மை மகிழ்ச்சியடையச் செய்து, உமது தீய செயல்கள் உமக்கு கவலையை உண்டாக்குமேயானால் நீர் முஃமின்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஹாகிம்)
عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّؓقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَنْ رَأَي مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذلِكَ أَضْعَفُ اْلإِيمَانِ. رواه مسلم،
உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் அதை அவர் தமது கையால் மாற்றிவிடவும் (கையால் மாற்றும்) சக்தி இல்லையெனில், நாவால் அதை மாற்றிவிடவும். அதற்கும் சக்தியில்லையென்றால், உள்ளத்தால் அது தீயதென அறிந்துகொள்ளவும். (உள்ளத்தில் அத்தீமையைப் பற்றி கவலை கொள்ளவும்) இது ஈமானுடைய மிகப் பலவீனமான தரமாகும்”. என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)
عَنْ هِنْدِ بْنِ أَبِي هَالَةَؓ قَالَ: كَانَ رَسُولُ اللهِ ﷺ مُتَوَاصِلَ اْلاَحْزَانِ دَائِمَ الْفِكْرَةِ لَيْسَتْ لَهُ رَاحَةٌ طَوِيلَ السَّكْتِ لاَ يَتَكَلَّمُ فِي غَيْرِ حَاجَةٍ. الشمائل المحمدية والخصائل المصطفوية،
நபி (ஸல்) அவர்கள் (தன் உம்மத்தைப்பற்றி) தொடர்ந்து கவலையுடையவர்களாகவும், எப்பொழுதும் கவலையுற்றவர்களாகவும் இருப்பார்கள், (உம்மத்தைப் பற்றிய இந்தக் கவலை காரணமாக) அன்னார் எந்நேரமும் நிம்மதியற்று இருப்பார்கள், அதிகம் மௌனமாகவே இருப்பார்கள், தேவையின்றிப் பேசமாட்டார்கள்” என்று ஹஜ்ரத் ஹிந்துப்னு அபீஹாலா (ரலி) அவர்கள், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் தன்மைகளை கூறுகிறார்கள். (ஷமாயில் திர்மிதீ)
【துன்பங்களை கண்டு துவண்டு விடாமல் அமல்களை கொண்டு தூய்மைப்படுத்திட வேண்டும்】
அன்புள்ளவர்களே! நமக்கு ஏற்பட்ட துன்பங்களை கண்டு துவண்டு விடாமல் அமல்களை கொண்டு தூய்மைப்படுத்திட / துடைத்திட வேண்டும். அதுதான் அல்லாஹ்வும், அவனது ரஸூலும் நம்க்கு கற்றுத்தந்த வழிமுறையாகும்.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ؓ قَالَ: كَانَ رَسُولُ اللهِﷺ يُعَلِّمُنَا اْلاِسْتِخَارَةَ فِي اْلأُمُورِ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ يَقُولُ: إِذَاهَمَّ أَحَدُكُمْ بِاْلاَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِالْفَرِيضَةِ ثُمَّ لْيَقُلْ: اَللّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْاَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ، وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ، وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ، اَللّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هذَا اْلاَمْرَ خَيْرٌلِّي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ: عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ. فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هذَا اْلاَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ: فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْلِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي بِهِ قَالَ: وَيُسَمِّي حَاجَتَهُ. رواه البخاري
ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், குர்ஆனிலுள்ள சூராக்களை முக்கியத்துவத்துடன் எங்களுக்குக் கற்றுக் கொடுப்பதுபோல், எங்கள் காரியங்களில் இஸ்திகாரா செய்வதையும் முக்கியத்துவத்துடன் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். மேலும், உங்களில் எவரேனும் ஏதேனும் ஒரு காரியம் செய்ய நாடினால், (அதன் முடிவு நன்மையாக இருக்குமா ? இருக்காதா ? என்ற கவலை ஏற்பட்டால் அவர் இவ்விதம் இஸ்திகாரா செய்யவேண்டும்) முதலில் அவர் இரண்டு ரக்அத் நஃபில் தொழுதுவிட்டுப் பிறகு (اَللّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْاَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ، وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ، وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ، اَللّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هذَا اْلاَمْرَ خَيْرٌلِّي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ: عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ. فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هذَا اْلاَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ: فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْلِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي بِهِ) என்ற துஆவை ஓதவேண்டும். துஆவில் தான் நாடியுள்ள காரியத்தை இன்ன காரியம் என்று சொல்ல வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிப்பாளர் கூறுகிறார். (புகாரி- 1166)
عَنْ أَبِي سَعِيدِنِ الْخُدْرِيِّ َؓ قَالَ: دَخَلَ رَسُولُ اللهِ ﷺ: ذَاتَ يَوْمِ نِ الْمَسْجِدَ فَإِذَا هُوَ بِرَجُلٍ مِنَ اْلاَنْصَارِ يُقَالُ لَهُ أَبُو أُمَامَةَ فَقَالَ: يَاأَبَا أُمَامَةَ! مَالِي أَرَاكَ جَالِساً فِي الْمَسْجِدِ فِي غَيْرِ وَقْتِ الصَّلاَةِ؟ قَالَ: هُمُومٌ لَزِمَتْنِي وَدُيُونٌ يَارَسُولَ اللهِﷺ قَالَ: أَفَلاَ أُعَلِّمُكَ كَلاَماً إِذَا قُلْتَهُ أَذْهَبَ اللهُ هَمَّكَ وَقَضَي عَنْكَ دَيْنَكَ؟ قَالَ: قُلْتُ: بَلَي يَارَسُولَ اللهِﷺ قَالَ: قُلْ: إِذَا أَصْبَحْتَ وَإِذَا أَمْسَيْتَ: اَللّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبُنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ قَالَ: فَفَعَلْتُ ذلِكَ فَأَذْهَبَ الله هَمِّي وَقَضَي عَنِّي دَيْنِي. رواه ابوداؤد
ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ஒரு நாள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுக்குள் வந்தபோது அபூஉமாமா என்னும் அன்ஸாரித் தோழர் இருக்கக் கண்டார்கள். அபூஉமாமா! தொழுகை அல்லாத நேரத்தில் பள்ளியில் (தன்னந்தனியாக) உட்கார்ந்திருக்கக் காண்கிறேனே! என்ன செய்தி?” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்க, யாரஸூலல்லாஹ், என்னைக் கவலைகளும், கடன்களும் சூழ்ந்துள்ளன’ என்று ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
உமக்கு ஒரு துஆவைக் கற்றுத்தரவா? அதை நீர் ஒதினால் அல்லாஹுதஆலா உமது கவலையை நீக்கிவிடுவான், கடனை அடைத்துவிடுவான்என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்டார்கள், யாரஸூலல்லாஹ், அவசியம் கற்றுத் தாருங்கள்’, என்று ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் வேண்டினார்கள். நீர் காலையிலும், மாலையிலும் (اَللّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبُنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ) ) யால்லாஹ்! நான் கவலை, துக்கத்தை விட்டும் உன்னைக் கொண்டு பாதுகாப்பு வேண்டுகிறேன், இயலாமை, சோம்பலைவிட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன், கஞ்சத்தனம், கோழைத்தனத்தை விட்டும் பாதுகாப்பு வேண்டுகிறேன், நான் கடன் சுமையில் மூழ்குவதைவிட்டும், மக்கள் என் மீது ஆதிக்கம் செலுத்துவதை விட்டும் உன்னுடைய பாதுகாப்பை வேண்டுகிறேன் என்ற துஆவை ஓதி வருவீராக! என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் காலை, மாலையில் இந்த துஆவை ஓதி வந்தேன். அல்லாஹுதஆலா என் கவலையை நீக்கினான், என் கடன் அனைத்தையும் நிறைவேற்றினான்’ என்று ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். [அபுதாவூது]
عَنْ أَبِي الدَّرْدَاءِ رضى الله عنه قَالَ مَنْ قَالَ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَى حَسْبِيَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ سَبْعَ مَرَّاتٍ كَفَاهُ اللَّهُ مَا أَهَمَّهُ صَادِقًا كَانَ بِهَا أَوْ كَاذِبًا . رواه أبو داود.
எவர் காலையும், மாலையும், حَسْبِيَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ என்று 7 தடவை ஓதுவாரோ அவருடைய கவலைக்கு அல்லாஹ் போதுமானவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَزِمَ الِاسْتِغْفَارَ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا وَمِنْ كُلِّ هَمٍّ فَرَجًا وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ» . رَوَاهُ أحمدُ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه
எவர் பாவமன்னிப்பை பற்றிப்பிடிப்பாரோ அல்லாஹ் அவருக்கு நெருக்கடியான வாழ்வை விட்டும் விசாலத்தை வழங்குவான். கவலையை விட்டும் மகிழ்ச்சியை வழங்குவான். கணக்கின்றி ரிஸ்கை வழங்குவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் [Mishkat al-Masabih 2339]
ஒரு முஸ்லிமுக்கு களைப்போ, நோயோ, கவலையோ, துக்கமோ, சோர்வோ ஏற்படுமேயானால் அவருக்கு ஏதேனும் முள் தைத்து விட்டாலும் கூட, அதன் காரணமாக அல்லாஹுதஆலா அவரது பாவங்களை மன்னித்துவிடுவான்” (புகாரி 5642)
【 துன்பத்தை சகித்துக் கொண்டால் சுவனம் ! 】
عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلاَ أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى. قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنِّي أُصْرَعُ، وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي. قَالَ “ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ ”. فَقَالَتْ أَصْبِرُ. فَقَالَتْ إِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ أَنْ لاَ أَتَكَشَّفَ، فَدَعَا لَهَا.
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது : இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று என்னிடம், கேட்டார்கள். நான், “ஆம்; (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு நாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம்.
(இதற்குப் பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். (புகாரி – 5652 )
ஒரு முஸ்லிம் சொர்க்கத்துக்குச் செல்ல நல்லறங்கள் காரணமாக அமைவது போல் துன்பங்களைச் சகித்துக் கொள்வதும் சொர்க்கம் செல்வதற்கான காரணமாக அமைந்துள்ளது என்பதற்கு இந்த நபிமொழி சான்றாக அமைந்துள்ளது.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ “ إِنَّ اللَّهَ قَالَ إِذَا ابْتَلَيْتُ عَبْدِي بِحَبِيبَتَيْهِ فَصَبَرَ عَوَّضْتُهُ مِنْهُمَا الْجَنَّةَ ”. يُرِيدُ عَيْنَيْهِ. تَابَعَهُ أَشْعَثُ بْنُ جَابِرٍ وَأَبُو ظِلاَلٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
அல்லாஹ் கூறுகிறான் : நான் என் அடியானை, அவனுக்கு விருப்பமான இரு பொருட்களை (கண்களைப் பறித்து)க் கொண்டு சோதித்து, அவன் அதைப் பொறுத்துக் கொண்டால், அவற்றுக்குப் பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். (புகாரி – 5653 )
இந்த உலகத்தில் அல்லாஹ் தந்த செல்வங்களை நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்குக் கண் மிகவும் அவசியமாகும். கண்ணிருப்பதால்தான் அதிகம் செலவு செய்கிறோம். நாம் அழகான ஆடை வாங்குகிறோம்; அழகான வீட்டை வாங்குகிறோம். எல்லாப் பொருளையும் அழகானவையாகத் தேர்ந்தெடுத்து வாங்குவதற்குக் காரணம் கண்கள்தான்.
இவ்வளவு பெரிய பாக்கியம் மற்றவர்களுக்கு இருப்பது போல் நமக்கு இல்லாமல் போய் விட்டால் நாம் அடையும் துன்பம் கொஞ்சமல்ல. கண்களை இழந்து விட்டாலும் அதனைச் சகித்துக் கொண்டு ஒழுங்காக வாழ்ந்தால் அதற்காக இறைவன் சொர்க்கத்தைத் தருகிறான்.
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ صُهَيْبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ عَجَبًا لأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لأَحَدٍ إِلاَّ لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ ” .
இறை நம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமைகின்றன. இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இது கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்து விடுகிறது. [முஸ்லிம்-5726]
وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:155)
【 துன்பங்கள் ஏற்பட்டால் கலங்கக் கூடாது 】
அன்புள்ளவர்களே! அல்குர் ஆனில் 100 -க்கும் மேற்பட்ட இவ்வசனங்களில் உலகில் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள பாக்கியங்களும், கவலைகளை ஏற்படுத்தும் சிரமங்களும் ஒரு பரீட்சை என்று கூறப்படுகிறது.
இறை நம்பிக்கையாளர்களுக்கும், இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் ஏற்படும் பல்வேறு குழப்பங்களுக்கு இதன் மூலம் தீர்வு சொல்லப்பட்டுள்ளது. கெட்டவர்கள் சிறப்பான வாழ்க்கை வாழ்வதையும், சில நல்லவர்கள் கஷ்டப்படுவதையும் பார்க்கும்போது இறைவன் என்று ஒருவன் இருந்தால் இப்படி நடக்குமா? என்ற குழப்பம் சிலருக்கு உள்ளது.
. عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ، وَجَنَّةُ الْكَافِرِ. رواه مسلم
“உலகம் முஃமின்களுக்கு சிறைச்சாலை, காஃபிர்களுக்கு சொர்க்கம்’’ (முஸ்லிம்)
தெளிவுரை:- அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டோருக்காக இவ்வுலகில் ஏற்படும் கவலைகள் , துன்பங்களை கவனிக்கும் பட்சத்தில் உலகம் முஃமினுக்குச் சிறை, அதேபோன்று காஃபிருக்கு எந்தவித கவலையில்லாமல் மனம் போன போக்கில் வாழ்வதை கவனிக்கும் பட்சத்தில் காபிருக்கு இவ்வுலகம் சுவர்க்கம்! (மிர்காத்)
【 அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் ! 】
அன்புள்ளவர்களே! ஒரு மனித சமுதாயத்திற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட அனுப்பப்பட்ட நபிமார்கள் தங்களின் வாழ்வில் எத்துனையோ சோதனைகளையும் கஷ்டங் களையும் சந்தித்துள்ளனர்.நபிமார்களும் ஸாலிஹீன்களும் கவலைப்பட்ட தருனங்கள் உண்டு. கவலை நல்லவர்களின் கேடயம் என்று சொல்வது பொருத்தமாகும்.
நாம் வாழ்கின்ற இந்த உலக வாழ்க்கை, இன்பமும்,துன்பமும் கலந்த கலவை.துன்பத்தை அனுபவிக்காமல் இன்பத்திலேயே மூழ்கியவனும் கிடையாது.இன்பத்தை சுவைக்காமல் துன்பத்திலேயே சிக்கியவனும் கிடையாது. நம்மைப் படைத்த இறைவன் இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தருகிறான்.
ஒரு நொடியில் ஏற்படும் துன்பம், அடுத்த நொடியில் ஏற்படும் இன்பத்தால் மறைந்து போய்விடும். ஓர் உயிரிழப்பு ஏற்பட்டு துன்பத்தில் துவண்டு கொண்டிருக்கும் ஒரு வீட்டில், புது வரவாக ஒரு குழந்தை பிறப்பது, அந்த வீட்டில் குதூகலத்தை ஏற்படுத்துகிறது. பொருளாதாரத்தில் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து மனம் நொந்து போன ஒருவனுக்கு சிறந்த ஊதியத்தில் பணி கிடைக்கிற போது, நஷ்டத்தைக் குறித்த கவலை காணாமல் போகிறது. இது மனித வாழ்கையின் தாத்பரியம்.இந்த தாத்பரியத்தை ஒருவன் புரிந்து கொண்டால் கஷ்டங்களை சுலபமாக எதிர்கொள்ளும் பக்குவத்தைப் பெற்று விடுவான்.
“நிச்சயமாக துன்பத்துடன் இன்பமும் இருக்கிறது” என்ற அல்குர்ஆன் 94 வது அத்தியாயத்தின் 5 வது வசனம், நமக்கு இந்த தாத்பரியத்தை நன்கு புரிய வைக்கும். கஷ்டத்திலும்,கவலையிலும் சிக்கித் தவிப்பவர்களுக்கு இந்த வசனம்,கவலை போக்கும் சிறந்த மருந்தாக அமைகிறது. எத்தனையோ நோய்களுக்கு நிவாரணத்தைக் கண்டுபிடித்த இந்த உலகம், கவலையில் வீழ்ந்தவனுக்கு எந்த நிவாரணத்தையும் தரமுடியாமல் திணறி நிற்கிற போது, “கஷ்டம் வந்தால் நிச்சயம் மகிழ்ச்சியும் நம் வீட்டுக் கதவைத் தட்டும்” என்று கூறும் இந்த ஒற்றை வரி திருமறை வசனத்தின் வழியாக அந்த நிவாரணத்தை இஸ்லாம் தந்து விட்டது.
அறிஞர் லுக்மான் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் தன் மகனை அழைத்துக் கொண்டு அவசரமாக ஒரு ஊருக்குப் புறப்படுகிறார்கள். வழியில் ஒரு காட்டுப் பகுதியில் மகனின் காலில் முள் ஒன்று தைத்து இரத்தம் வழிகிறது. கடுமையான வலி. நடக்க முடியவில்லை. சரி இன்றிரவு இங்கேயே பொழுதைக் கழித்து விட்டு வலி குறைந்ததும் பயணிக்கலாம் என்று அங்கு தங்குகிறார்கள். மறுநாள் காலையில் புறப்பட்டு அந்த ஊருக்கு சென்று பார்த்தபோது ஒரே மயானமாக காட்சி தந்தது . அன்று அதிகாலையில் நடந்த பூகம்பத்தில் அந்த ஊரே காணாமல் போயிருந்தது.
மகனே! ஒருவேளை உன் காலில் முள் குத்தாமல் இருந்திருந் தால் நாமும் பூமிக்குள் புதையுண்டிருப்போம் என்று அறிஞர் லுக்மான் {அலை} அவர்கள் தன் மகனிடம் கூறிய வரலாறு, இந்த வசனத்தின் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
நம் வாழ்க்கையில் துன்பங்களையும்,கவலைகளையும் அள்ளித் தெளிப்பது இறைவனின் விருப்பமல்ல.மாறாக இன்பங்களை நாம் முழுமையாக விளங்குவதற்காகத் தான் துன்பங்களைத் தருகிறான். நிழலின் அருமையை விளங்குவதற்கு வெயில் தேவைப்படு வதைப் போல, இன்பங்களின் யதார்தத்தைப் புரிய வைப்பதற்கு துன்பங்களும் தேவைப் படுகிறது என்ற உண்மையை நாம் புரிய வேண்டும்.
கஷ்டம் என்பது நமது வாழ்வில் இல்லாது விட்டால் வாழ்க்கை யில் உருவாகும் மகிழ்ச்சி சுவையாக இருக்காது. வீழாமல் இருப்பது பலம் அல்ல. மீண்டும் மீண்டும் வீழ்ந்து தைரியமாக எழுந்து நடப்பதில் தான் உண்மையான பலம் அடங்கியுள்ளது. கஷ்டங்கள், துன்பங்கள் நேர்ந்த போது மனம் தளர்ந்து விடாமல் அவற்றைத் திராணியோடு எதிர்த்து நின்று போராடிப் பெறும் இன்பம் தான் வாழ்வில் நிலையான இன்பம்.
ஆக துயரங்கள் நம்மை சூழ்கொள்கிற போது, துவண்டு விடாமல் “நிச்சயம் இதற்குப் பின்பு மகிழ்ச்சி பிறக்கும்” என்ற உண்மையை உணர வைக்கிற இந்த வசனத்தைப் படித்துப் பார்த்தால் நிச்சயம் மலை போன்ற அந்த துயரங்கள் கடுகைப் போன்று சிறுத்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நபி யஃகூப் அலை அவர்கள் தங்களின் பிரியமான மகன் யூஸுப் அலை அவர்கள் பிரிந்த போது துக்கத்தால் துவண்டு போனார்கள்.
كما قال تعالى عن يعقوب -عليه السلام- في فَقدِ ابنه يوسف -عليه السلام-: (وَقَالَ يَا أَسَفَى عَلَى يُوسُفَ وَابْيَضَّتْ عَيْنَاهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيمٌ) [يوسف:84]
யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” என்று (கவலைப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன – பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.
ما فعل النبي -صلى الله عليه وسلم- حينما مات ولده إبراهيم فقال: “إن العينَ لتدمع، وإنّ القلب ليحزن، ولا نقول إلا ما يرضِي الربَّ، وإنّا على فراقك -يا إبراهيم- لمحزونون”. رواه البخاري ومسلم.
நபி ஸல் அவர்களின் மகனார் இப்ராஹீம் ரலி அவர்கள் இறந்தபோது கண் கண்ணீர் வடிக்கிறது. கல்பு கவலை கொள்கிறது. இப்ராஹீமே! உன் பிரிவால் நாம் துக்கத்தில் வாடுகின்றோம். ஆனாலும் அல்லாஹ் பொருந்தாத எந்த வார்த்தையையும் நாம் சொல்லமாட்டோம் என்று கூறினார்கள்.
كما في قصّة أبي الدرداء -رضي الله عنه- حينما بكى وحزن وقد رأى دولةَ الأكاسرة تهوي تحتَ أقدام المسلمين، وقد قال له رجل: يا أبا الدرداء: تبكي في يومٍ أعزّ الله الإسلامَ وأهله؟! فقال أبو الدرداء -رضي الله تعالى عنه-: “ويحك يا هذا، ما أهونَ الخلق على الله إذا أضاعوا أمرَه، بينما هي أمة قاهرة ظاهرةٌ ترَكوا أمرَ الله فصاروا إلى ما ترى“
பாரசீகம் வெற்றிக்கொள்ளப்பட்டு அதன் கருவூலங்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டுவரப்பட்டபோது இஸ்லாமிய உலகமே கொண்டாடியது, ஆனால் அந்த நேரத்தில் அபுத்தர்தா ரலி அவர்கள் அழுது கவலைப்பட்டார்கள். அப்போது அவர்களிடம் ஒருவர் அல்லாஹ் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கண்ணியப்படுத்திய இன்றைய தினத்தில் ஏன் கவலைகொள்கிறீர்?என கேட்டார், அதற்கு ஹழ்ரத் அபுத்தர்தா ரலி அவர்கள் எத்துனை பெரும் பலமிக்க சமுதாயமாக இருந்தாலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்தால் அவர்களை கேவலப்படுத்துவான் என்பதற்கு பரசீகர்களின் வரலாறு ஒரு பாடமாகும் என்று கூறினார்கள்.
عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَىُّ النَّاسِ أَشَدُّ بَلاَءً قَالَ “ الأَنْبِيَاءُ ثُمَّ الأَمْثَلُ فَالأَمْثَلُ فَيُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ فَإِنْ كَانَ دِينُهُ صُلْبًا اشْتَدَّ بَلاَؤُهُ وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ ابْتُلِيَ عَلَى حَسَبِ دِينِهِ فَمَا يَبْرَحُ الْبَلاَءُ بِالْعَبْدِ حَتَّى يَتْرُكَهُ يَمْشِي عَلَى الأَرْضِ مَا عَلَيْهِ خَطِيئَةٌ ”
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) “நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியாக இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும்.
அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப்படுவான். ஒரு அடியான் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்” என்று கூறினார்கள். [திர்மிதீ-2398]
இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டால் இறைவன் யாருக்கும் அநியாயம் செய்யவில்லை. நமக்குச் சில குறைகள் இருப்பது போல் மற்றவர்களுக்கும் வேறு குறைகள் உள்ளன. நமக்கு மற்றவர்களை விட அதிகமான குறைகள் இருப்பதாக நமக்குத் தோன்றினால் அதற்காகவும் மறுமையில் பரிசுகள் உள்ளன என்ற நம்பிக்கை நமக்கு மன அமைதி அளிக்கும்.
மேலும் இன்னொரு காரணத்தினாலும் மனிதர்களுக்கு இறைவன் குறைகளை வைத்துள்ளான்.
இந்த உலகம் சீராக இயங்க வேண்டுமானால் குறைகளையும், நிறைகளையும் பலருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். எல்லோருக்கும் ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தால் யாரும் வேலைக்குப் போக மாட்டோம். நமது நிலத்தை நாமே உழுது பயிரிட சக்தி பெறவும் மாட்டோம். அனைவரும் உணவின்றி செத்து விடுவோம்.
இதனால் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறையையும், நிறையையும் வழங்கி இறைவன் கருணை புரிந்துள்ளான். நோயாளியைக் கொண்டு மருத்துவரின் வாழ்க்கை ஓடுகிறது. மருத்துவரின் மூலம் வியாபாரியின் வாழ்க்கை ஓடுகிறது. வியாபாரியின் மூலம் விவசாயி, மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கை ஓடுகிறது. இத்தகைய சங்கிலித் தொடர் மூலம் உலகம் இயங்குவதற்காகத் தான் இறைவன் இவ்வாறு செய்துள்ளான்.]
ஆகவே நாம் நம்முடைய வாழ்கையில் எந்த துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வுக்காக மறுமைக்காக பொறுத்துக் கொண்டு வாழும் நன் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!
- Get link
- X
- Other Apps