ஈஸா (அலை) செய்த அற்புதங்களும் நாம்பெறவேண்டிய படிப்பினைகளும். 23-12_22



ஈஸா (அலை) செய்த அற்புதங்களும் நாம்பெறவேண்டிய படிப்பினைகளும்


23-12-2022


بسم الله الرحمن الرحيم


மனிதன் சந்தோசத்திற்கும் மகிழ்ச்சியான தருணத்திற்கும் ஏங்குபவன் ஆவான். அதை அடைந்து கொள்ள மனிதன் படாதபாடுபடுவதை கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கிறோம்.

அதே நேரம் ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தவரையிலும் சந்தோஷத்தைத் தரும் விஷயங்கள் வித்தியாசப்படும். வேறுபடும். தனிநபர் சந்தோஷத்தைப் போன்றே ஒரு சமூகத்தின் மகிழ்ச்சியும் முக்கியமான ஒன்றாகும்.

ஒவ்வொரு மத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் அந்தந்த மதத்தோடு தொடர்பான பண்டிகைகளை்கொண்டாட்டங்கள்  வருடாவருடம் சுற்றிச் சுற்றி வந்துக் கொண்டேயிருக்கின்றன.

அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையானது பரவலாக கிறிஸ்தவர்களால் வருடா வருடம் டிசம்பர் மாதத்தின் கடைசிப் பகுதியில் 25 -ம் தேதியன்று உலகின் எல்லாப் பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

கிறிஸ்துவர்களும்... கிறிஸ்துவமும்...

 கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக வாழும் 127 நாடுகளிலும் சிறுபான்மையாக வாழும் 71 நாடுகளிலும் வாழ்கிற 21 ம் நூற்றாண்டின் கணக்குப் படி 2.4 பில்லியன் கிறிஸ்துவர்கள் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

கிறிஸ்துவம் என்பது பல உட்பிரிவுகளையும் வழக்கங்களையும் திருச்சபைகளையும் கொண்டதாகும். இவை இடத்துக்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்றபடி வேறுபடும் கோட்பாடுகளை (doctrine) கொண்டதாகும்.

2001 ம் ஆண்டு கிறிஸ்துவ கலைக் களஞ்சியத்தின் படி உலகம் முழுவதும் சுமார் 33,830 கிறிஸ்துவப் பிரிவுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துவர்கள் பிரதான மூன்று பிரிவுகளாக வாழ்கின்றனர்.

1. ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்டியன் (ஒரிஜினல் ரோமை) சேர்ந்தவர்கள். தற்போது ரஷ்யாவில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

2. கத்தோலிக் கிறிஸ்டியன் தற்போதைய வாடிகன் ரோமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுபவர்கள்.

3. புரோட்டஸ்டண்ட் கிறிஸ்டியன் சர்ச் ஆஃப் இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுபவர்கள்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் புரொட்டஸ்டண்ட் பிரிவில் தான் அதிகப்படியாக 780 உட்பிரிவுகளும் 276 கிளைப்பிரிவுகளும் உள்ளன.

இப்படி பல்வேறு பிரிவுகளாக பிரிந்திருக்கும் போதிலும் இவர்கள் அனைவரையும் இணைக்கும் மையப் புள்ளியாக கிறிஸ்துமஸ் பண்டிகை இருக்கிறது.

அனைவருமே அந்த நாளில் தான் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.


    நபி ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அற்புதப் படைப்பாக இருக்கிறார்கள். இந்த உலகில் ஆண், பெண் இருவரும் இணைந்தால் மட்டுமே ஒரு மனிதப் படைப்பு உருவாகும் என்பது நியதியாக இருக்கும்போது இருவரில் ஒருவர் கூட அசலாக இல்லாமல் ஒரு படைப்பை அல்லாஹ் படைத்தான். அதுதான் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம். அதேபோல் ஆண் மட்டுமே அசலாக வைத்து பெண் என்ற அசல் இல்லாமல் ஒரு படைப்பை அல்லாஹ் படைத்தான். அதுதான் ஹவ்வா அலைஹஸ்ஸலாம். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் விலா எலும்பிலிருந்து ஹவ்வா அலைஹஸ்ஸலாம் படைக்கப்பட்டார்கள்.   

அதேபோல் அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக் கூறும் அத்தாட்சிகளில் ஈஸா (அலை) அவர்களின் பிறப்பும் ஒன்று. பெண்ணை மட்டுமே அசலாக வைத்து ஆண் என்ற அசல் இல்லாமல் ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ் படைத்தான். ஈஸா (அலை) அவர்களை முஸ்லிம்களும் மதிக்கிறார்கள். கிறிஸ்வர்களும் மதிக்கிறார்கள். ஆனால் இறுதி வேதமாகிய குர்ஆன் சொல்லும் முறையில் ஈஸா நபியை கிறிஸ்தவர்கள் நம்பவுமில்லை. ஏற்கவுமில்லை.

 ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு:-

إِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِنْهُ اسْمُهُ الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ وَجِيهًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِينَ (ال عمران 45
  மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன் வார்த்தையின் மூலம் உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான். அவர்பெயர் மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ். அவர் இவ்வுலகிலும் மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்துடையவராகவும் இருப்பார். அல்லாஹ்வுக்கு நெருக்கமானவராகவும் இருப்பார் என வானவர்கள் கூறியதை (எண்ணிப் பார்ப்பீராக.)

 

ஈஸா (அலை) மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்களா?

ஈஸா அலைஹிஸ்ஸலாம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததாக பின்வரும் பைபிள் வாசகங்களில் உள்ளது. கிறிஸ்தவர்களும் அதை நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.                        

  மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த ரோமப்பேரரசன் அகுஸ்துஸ் மக்கள் தொகை கணிப்பீட்டுக்குக் கட்டளையிட்டார். அவர் கட்டளைப்படி யோசேப்பும் மரியாளும் தங்களை பதிவு செய்ய யோசேப்பின் முன்னோரான தாவீதின் நகரமான பெத்லகேமுக்குச் சென்றனர். அங்கு தங்குவதற்கு அறைகள் கிடைக்காத போது மாட்டுத் தொழுவமொன்றில் தங்கினர். அம் மாட்டுத் தொழுவத்தில் மரியாள் இயேசுவைப் பெற்றார். -கிறிஸ்தவ நூல்

 

ஆனால் குர்ஆன் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பைப் பற்றிச் சொல்லும்போது பேரீத்தமரத்தின் அடியில் பெற்றெடுத்ததாகக் கூறுகிறது.

 பொதுவாக பெண்களுக்கு மிக மிக சிரமமான நேரம் என்பது குழந்தையைப் பெற்றெடுக்கும் அந்த நேரம். மிகப்பெரும் இன்னலை அனுபவிக்கும் அந்த நேரத்தில் பெண்கள் தனக்கு மிகப்பெரிய ஆறுதலை எதிர் பார்ப்பார்கள். உலகில் பெற்ற தாயை விட அரவணைப்பையும் ஆறுதலையும் வேறு யாரும் தர முடியாது. எனவே தான் பெரும்பாலும் பிரசவ நேரத்தில் பெண்கள் தங்கள் தாய்மார்களுடன் இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். அந்த சிரமமான நேரம் மர்யம் அலை அவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் அவர்களுக்கு அருகில் தாயும் இல்லை. கணவரும் இல்லை. ஆறுதல் சொல்ல யாரும் இல்லை. மட்டுமல்ல ஆண் துணையின்றி குழந்தையை சுமந்திருக்கிற காரணத்தால் ஊர் உலகம் என்ன சொல்லும் என்ற கவலை வேறு.அதனால் தான்

يَا لَيْتَنِي مِتُّ قَبْلَ هَذَا وَكُنتُ نَسْياً مَّنسِيّاً

இந்த்த மாதரியான நிகழ்வை சந்திப்பதற்கு முன் நான் மரணித்திருக்கக்கூடாதா என்று கூறினார்கள்.

உலகில் யாரும் சந்திக்காத மிகப்பெரும் நெருக்கடியான ஒரு சூழலை அவர்கள் சந்தித்தார்கள். அந்த நேரத்தில் உலகில் யாருக்கும் கிடைக்காத ஒரு ஆறுதல் அவர்களுக்கு கிடைத்தது. ஆம் அல்லாஹ்வே அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறினான்.

فَاَجَآءَهَا الْمَخَاضُ اِلٰى جِذْعِ النَّخْلَةِ‌ۚ قَالَتْ يٰلَيْتَنِىْ مِتُّ قَبْلَ هٰذَا وَكُنْتُ نَسْيًا مَّنْسِيًّا

பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: இதற்கு முன்பே நான் இறந்துமுற்றிலும் மறக்கப்பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறி(அரற்றி)னார். (அல்குர்ஆன் 19  :  23)

فَنَادٰٮهَا مِنْ تَحْتِهَاۤ اَلَّا تَحْزَنِىْ قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيّا

(அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினார்.   (அல்குர்ஆன் 19  :  24)

ஈஸா அலை அவர்களைச் சுமந்திருந்த அன்னை மர்யம் அலை அவர்களின் பிரசவ வலியை இலேசாக்கும் விதமாக ஜிப்ரயீல் அலை அவர்களின் மூலம் அல்லாஹ் ஆறுதல் கூறியதை ஈஸா நபிக்கு அல்லாஹ் கொடுத்த அற்புதமாக மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.


.


மூவரைத் தவிர வேறெவரும் தொட்டிலில் பேசியதில்லை (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள்.(மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் ஜுரைஜ்’ என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்த போது அவருடைய தாயார் அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?’ என்று கூறிக் கொண்டார். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், இறைவா! இவனை விபச்சாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல் மரணிக்கச் செய்யாதே! என்று கூறி விட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தமது வழிபாட்டுத்தலத்தில் இருந்த போது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்து விட்டார். ஆகவே, (அவள் அவரைப் பழி வாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபச்சாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு இது ஜுரைஜுக்குப் பிறந்தது’ என்று (மக்களிடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரது வழிபாட்டுத்தலத்தை இடித்து கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூ செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, குழந்தையே! உன் தந்தை யார்? என்று கேட்டார். அக்குழந்தை, (இன்ன) இடையன் என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்து கொண்ட அந்த மக்கள், தங்கள் வழிபாட்டுத்தலத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம் என்று கூறினார்கள். அதற்கு அவர், இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டார்.

பிறந்த பிறகு அற்புதம் :

தன் தாயின் பரிசுத்தத்தை உலகிற்கு அறிவிக்க பிறந்தவுடன் ஈஸா அலை அவர்களை அல்லாஹ் பேச வைத்தான். இது ஈஸா நபிக்கு அல்லாஹ் அளித்த மாபெரும் அற்புதம்.

(குழந்தைப் பருவத்தில் பேசிய மூன்றாமவர்) இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தன் மகனுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் சவாரி செய்த வண்ணம் சென்று கொண்டிருந்தான். உடனே அவள், இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்கு என்று துஆ செய்தாள். உடனே, அந்தக் குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கி விடாதே என்று கூறியது. பிறகு அவளது மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. – இந்த இடத்தில் நபியவர்கள் தம் விரலை சூப்புவது போல் தெரிந்தது – பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே என்று கூறினாள். உடனே அக்குழந்தை அவளது மார்பை விட்டுவிட்டு, இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), ஏன் இப்படிச் சொல்கிறாய்? என்று கேட்டதற்கு அக்குழந்தை, வாகனத்தில் சவாரி செய்து சென்றவன் கொடுங்கோலர்களில் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) நீ திருடிவிட்டாய்; விபச்சாரம் செய்து விட்டாய்’ என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்யவில்லை என்று பதிலளித்தது. (புகாரி ; 3436)


ஈஸா (அலை) அவர்களின் பிறப்பை கிறிஸ்துமஸ் என்ற பெயரில்........

ஆரம்ப காலத்தில் கொண்டாடப்படவில்லை

 தொடக்க காலத்தின் கிறிஸ்தவ அவையில் இயேசுவின் பிறந்த நாள் திருநாளாகக் கொண்டாடப் படவில்லை. கி.பி. 245-ல் ஒரிஜென் என்ற ஆரம்பகால கிறிஸ்தவ குரு இயேசு உட்பட அனைவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை எதிர்த்தார். பார்வோனரசரைப் (ஃபிர்அவ்னைப்) போல இயேசுவின் பிறப்பைக் கொண்டாடக் கூடாது. அவ்வாறு செய்பவர்கள் பாவிகள் தானே தவிர புனிதர்கள் அல்ல எனக் குறிப்பிட்டார். ஒரிஜெனின் கருத்து கிறித்தவ திருச் சபையால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளாகவும் நம்பியிருக்கவில்லை

குகைவாசிகளின் இருப்பிடம் ஜோர்டானில் இன்றைக்கு உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு அங்கு சில பழங்காலச் சுவடிகள் கண்டு பிடிக்கப்பட்டது. அது அந்த குகைவாசிகளான இளைஞர்கள் வைத்திருந்த இன்ஜீலுடைய பாகங்களாகும். அதில் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் போதித்த உண்மையான ஏகத்துவக் கொள்கைகள் இடம் பெற்றிருந்தன. அந்தச் சுவடிகள் அப்பகுதியில் ஆடு மேய்க்கும் சிறுவன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டு அது எங்கெங்கோ கைமாறி கடைசியில் பாதிரிமார்கள் கையில் சென்றடைந்தது. அவர்கள் அதை வெளி உலகுக்குத் தெரியப்படுத்தாமல் மூடி மறைத்து விட்டார்கள். ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹுசைன், "அந்தச் சாசனச் சுருள்கள் முஸ்லிம், யூத, கிறிஸ்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம்பொதுவாக ஒப்படைக்கப்பட்டு ஆராயப்பட வேண்டும்" என்றார். கிறிஸ்தவப் பாதிரிமார்கள் "அது தனியார் சொத்து" என்று வாதிட்டு அதை மறுத்து விட்டனர்.

"சாவுக்கடல் சாசனச் சுருள்கள்" என்ற தலைப்பில் 1998ல் பி.பி.சி. தொலைக் காட்சியில் இச்செய்தி பல தடவை ஒளி பரப்பப்பட்டது. 

 ஈஸா (அலை) கடவுளாக ஆக்கப்பட்டதன் பின்னணி

  பைபிளின் பல வசனங்களில் நல்லடியார்களை குறிப்பாக நபிமார்களை இறைமகன்கள் என்று கூறப்பட்டுள்ளது. உதாரணமாக இஸ்ராயீல் அதாவது யஃகூப்(அலை), தாவீது என்ற தாவூது (அலை), சாலமன் என்ற சுலைமான் (அலை), ஆகியோரை கர்த்தரின் பிள்ளைகள் என்று கூறும் பல்வேறு வசனங்கள் பைபிளில் நிறைய இடம் பெற்றுள்ளன. மக்கள் அனைவரையும்கூட இவ்வாறு கூறும் வசனங்கள் பைபிளில் உள்ளன. அதனால் அனைவருமே கடவுளின் வாரிசாக ஆகி விட முடியாது. 

“நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள். (உபாகமம் 14:1)

  ஈஸா (அலை) விஷயத்தில் “அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: 'இவர் என்னுடைய நேச குமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்' என்று உரைத்தது. (மத்தேயு 3:17)

 பைபிளில் உள்ள இதுபோன்ற பல வசனங்கள் அனைத்தும் இறைநேசர் என்ற அர்த்தத்தில்தான் கூறப்பட்டுள்ளதே தவிர இறைமகன் என்ற அர்த்தத்தில் கூறப்படவில்லை. இதையே கிறிஸ்தவ மக்கள் தவறாகப் புரிந்து இயேசுவைக் கடவுள் என்கிறார்கள்.

 ஈஸா(அலை) செய்து காட்டிய அற்புதங்கள்

இறந்தவர்களையும் உயிராக்குதல் போன்ற பல அற்புதங்களை நபி ஈஸா (அலை) செய்து காட்டியதை வைத்தே கிறிஸ்தவர்கள் அவர்களை கடவுள் என்றும் கூறத் துவங்கினர். ஆனால் வார்த்தைக்கு வார்த்தை அல்லாஹ்வின் அனுமதி கொண்டே இதை நான் செய்கிறேன் என்று கூறியதை சிந்திக்க மறந்து விட்டனர்.

وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُمْ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنْفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَأُحْيِي الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (49)

 ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் அந்தந்த காலத்திற்குத் தோதுவான அற்புதங்களை வழங்கினான். மூஸா (அலை) அவர்களின் காலம் சூனியக்காரர்கள் நிறைந்தது என்பதால் அவர்களுக்குத் தோதுவான அற்புதங்களை அல்லாஹ் தந்து அந்த அற்புதங்கள் இறைவன் புறத்தில் இருந்தே அல்லாமல் வேறு யாராலும் நிகழ்த்த முடியாது என்று உணர்த்தினான். அதேபோல் நபி (ஸல்) அவர்களின் காலம் அரபிப் புலமை வாய்ந்தவர்கள் நிறைந்த காலம் என்பதால் அல்லாஹ் அந்தப் புலமைகள் அனைத்தையும் தோற்கடிக்கும் விதமாக குர்ஆனை வழங்கி இதுபோல் ஒரு ஆயத்தைக் கொண்டு வாருங்கள் என அறைகூவல் விடுத்தான் .                     

அதுபோல் ஈஸா (அலை) உடைய காலம் மருத்துவர்கள் நிறைந்த காலம் என்பதால் அல்லாஹ் அதற்குத் தோதுவான அற்புதங்களை வழங்கி அந்த அற்புதங்கள் உண்மையான இறைவன் புறத்தில் இருந்தே அல்லாமல் வேறு யாராலும் நிகழ்த்த முடியாது என்பதை அல்லாஹ் உணர்த்தினான்.               

{فَأَنْفُخُ فِيهِ} قال وهب: كان يطير ما دام الناس ينظرون إليه فإذا غاب عن أعينهم سقط ميتا ليتميز فعل الخلق من فعل الله تعالى. وقيل: لم يخلق غير الخفاش لأنه أكمل الطير خلقا ليكون أبلغ في القدرة لأن لها ثديا وأسنانا وأذنا، وهي تحيض وتطهر وتلد. ويقال: إنما طلبوا خلق خفاش لأنه أعجب من سائر الخلق؛ ومن عجائبه أنه لحم ودم يطير بغير ريش ويلد كما يلد الحيوان ولا يبيض كما يبيض سائر الطيور، فيكون له الضرع يخرج منه اللبن، ولا يبصر في ضوء النهار ولا في ظلمة الليل، وإنما يرى في ساعتين: بعد غروب الشمس ساعة وبعد طلوع الفجر ساعة قبل أن يُسفر جدا، ويضحك كما يضحك الإنسان، ويحيض كما تحيض المرأة. ويقال: إن سؤالهم كان له على وجه التعنت فقالوا: أخلق لنا خفاشا واجعل فيه روحا إن كنت صادقا في مقالتك؛ فأخذ طينا وجعل منه خفاشا ثم نفخ فيه فإذا هو يطير بين السماء والأرض؛ (قرطبي

 கருத்து- களி மண் மூலமாக வவ்வால் மாதிரி உருவத்தைச் செய்து அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு நீ உயிராகு! என்பார்கள். அதற்கு உயிர் வரும். மனிதர்களின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தான் அது பறக்கும். அதன் பின் அது மய்யித்தாக விழுந்து விடும். அல்லாஹ் மனிதர்கள் மூலம் உருவாக்கித்தரும் படைப்புக்கும் அல்லாஹ்வின் நேரடியான படைப்புக்கும் வித்தியாசம் காட்டவே இந்த ஏற்பாடு.      

 வவ்வால் என்பது மற்ற பறவைகளைவிட பல வகையிலும் வித்தியாசமானது என்பதால் அதைச் செய்து காட்டினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வவ்வாலுக்கு பற்கள், மார்புகள், காதுகள் இருக்கும். பெண்களைப் போல் ஹைளு, நிஃபாஸ், பாலூட்டுதல் ஆகியவை வவ்வாலுக்கு உண்டு. வவ்வால் மனிதனைப் போல சிரிக்கும். மற்ற பறவைகளைப் போல் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்காமல் மனிதனைப் போல் குழந்தை பெற்றெடுக்கும்.வவ்வாலுக்கு இரண்டு நேரங்களில் மட்டும் கண் தெரியும். சூரிய உதயத்திற்குப் பின்பு சிறிது நேரம். சூரியன் மறைவுக்குப் பின் சிறிது நேரம். இத்தகைய அதிசயமான பறவையை ஈஸா நபி உருவாக்க முடியாது என்று எண்ணி அந்த மக்கள் கேட்டனர்.ஆனால் அல்லாஹ் தந்த ஆற்றல் மூலம் அனைத்தும் முடியும் என்பதை ஈஸா (அலை) நிரூபித்துக் காட்டினார்கள்.                       

பிறவிக் குருடருக்கும் பார்வை வந்த அதிசயம்

وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ

 நபி ஈஸா(அலை)செய்து காட்டிய மற்றொரு அதிசயம் பிறவிக் குருடர்களுக்கும் அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு பார்வையை வரவழைத்ததாகும். முதலில் பார்வை இருந்து பார்வை பறி போயிருந்தால் அந்தப் பார்வையை மீண்டும் கொண்டு வருவது அதிசயம் அல்ல. இன்றும் அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் நபி ஈஸா (அலை) செய்து காட்டியது அவ்வாறல்ல. பிறவியிலேயே குருடராகப் பிறந்தவருக்கு பார்வையை வரவழைத்தார்கள். கண்களுக்கு பதிலாக அந்த இடத்தில் நெற்றி போன்ற அமைப்பு உள்ள மனிதர்களுக்கும் பார்வையை வரவழைத்தார்கள். இது மற்றவர்களால் செய்து காட்ட முடியாத அற்புதம்

இறந்தவர்களை உயிராக்கிய அதிசயம்

{وَأُحْيِي الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ} قيل: أحيا أربعة أنفس: العاذر: وكان صديقا له، وابن العجوز وابنة العاشر وسام بن نوح؛ فالله أعلم. فأما العاذر فإنه كان قد توفى قبل ذلك بأيام فدعا الله فقام بإذن الله وودكه يقطر فعاش وولد له، وأما ابن العجوز فإنه مر به يُحمل على سريره فدعا الله فقام ولبس ثيابه وحمل السرير على عنقه ورجع إلى أهله. وأما بنت العاشر فكان أتى عليها ليلة فدعا الله فعاشت بعد ذلك وولد لها؛ فلما رأوا ذلك قالوا: إنك تحيي من كان موته قريبا فلعلهم لم يموتوا فأصابتهم سكتة فأحيي لنا سام بن نوح. فقال لهم: دلوني على قبره، فخرج وخرج القوم معه، حتى انتهى إلى قبره فدعا الله فخرج من قبره وقد شاب رأسه. فقال له عيسى: كيف شاب رأسك ولم يكن في زمانكم شيب؟ فقال: يا روح الله، إنك دعوتني فسمعت صوتا يقول: أجب روح الله، فظننت أن القيامة قد قامت، فمن هول ذلك شاب رأسي. فسأله عن النزع فقال: يا روح الله إن مرارة النزع لم تذهب عن حنجرتي؛ وقد كان من وقت موته أكثر من أربعة آلاف سنة، فقال للقوم: صدقوه فإنه نبي؛ فآمن به بعضهم وكذبه بعضهم وقالوا: هذا سحر. (قرطبي

 இறந்தவர்களில் நான்கு நபர்களை உயிராக்கியுள்ளார்கள். 1. ஈஸா (அலை)அவர்களின் நண்பர் ஆதிர். அவர் இறந்து சில தினங்களுக்குப் பின் உயிராக்கினார்கள். அதன் பின்னர் அவர் பிள்ளைகளையும் பெற்றார்.2.ஒரு மூதாட்டியின் மகன் இவரை இறந்த நிலையில் கஃபனிட்டு கட்டிலில் தூக்கிச் சென்றனர். அவரை உயிராக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அவர் உயிர் பெற்று எழுந்து தனது இயல்பான ஆடையை அணிந்ததுடன் அந்தக் கட்டிலை அவரே வீடு வரை சுமந்து சென்றார்.      

                             

 3. ஒரு பெண். இறந்த விட்ட இந்தப் பெண்ணின் வீட்டுக்கு வந்த ஈஸா(அலை) அவரை உயிராக்கிட அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள். அந்தப் பெண் உயிர் பெற்று எழுந்தார். அவருக்கும் குழந்தைகள் பிறந்தன.4. நூஹ் (அலை) அவர்களின் சாம் என்ற மகனை உயிராக்கினார்கள். இதன் பின்னணியாகிறது அந்த மக்கள் ஈஸா(அலை) அவர்களிடம் நீங்கள் சமீபத்தில் இறந்தவர்களை மட்டும் தான் உயிர் பெற வைக்கிறீர்கள். ஒருவேளை மயக்கத்தில் இருந்த அவர்களை இறந்ததாக கருதப்பட்டிருக்கலாம். அவர்களின் மயக்கத்தை நீங்கள் தெளிய வைத்ததாகவும் நாம் கருதுகிறோம். எனவே இறந்து நீண்ட காலம் ஆனவர்களை உயிராக்க முடியுமா? குறிப்பாக 4000 வருடங்களுக்கு முன் இறந்த நூஹ் (அலை) அவர்களின் சாம் என்ற மகனை உயிராக்க முடியுமா? என்று கேட்க, அதற்கு ஈஸா (அலை) சாமின் கப்ரைக் காட்டுங்கள் என்றார்கள்.அவ்வாறே காட்டப்பட்டது. அவரை உயிராக்கும் படி அல்லாஹ்விடம் துஆ செய்ய அவர் உயிர் பெற்று எழுந்தார்.ஆனால் தலைமுடி நரைத்த நிலையில் எழுந்தார். அவரிடம் ஈஸா (அலை) அவர்கள் உங்களின் காலத்தில் நரை என்பதே இல்லையே? என்று கேட்க, நீங்கள் என்னை அழைத்தவுடன் கியாமத் வந்து விட்டதோ என்ற பயத்தில் எழுந்தேன். அதனால் நரைத்து விட்டது என்றார். அவரிடம் அவருடைய சகராத் பற்றி ஈஸா (அலை) அவர்கள் கேட்க, இத்தனை வருடங்கள் ஆகியும் அதன் வலியை இன்றும் உணருகிறேன் என்றார். மேலும் அவர் அந்த மக்களிடம் ஈஸா (அலை) அவர்களை தூதர் என நம்புங்கள் என்றார். சிலர் மட்டும் அப்போதே இஸ்லாத்தை ஏற்றனர். வேறு சிலர் இதை சூனியம் என்றார்கள். வேறு சில அறிவிப்பில் அந்த சாம் சற்று நேரத்தில் மீண்டும் அந்த கப்ருக்குள் மய்யித்தாக ஆக்கப்பட்டார். ஆனால் அவர் ஈஸா (அலை) அவர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தார். என்னை நீங்கள் மீண்டும் மவ்த்தாக்கும் போது ஏற்கெனவே சகராத்தை நான் அனுபவித்து விட்டதால் மீண்டும் சகராத் வராமல் இருக்க துஆ செய்யுங்கள் என்றார். அவ்வாறே ஈஸா (அலை) துஆ செய்தார்கள்.                                                         

படிப்பினை -சகராத்தின் வேதனை என்பது அனைவருக்கும் பொதுவானது என்றாலும் முஃமின்களுக்கு சகராத் வேதனை இலகுவாக ஆக்கப்படும். மலக்குல் மவ்த் அவர்களை ஒரு தடவை நபி(ஸல்)அவர்கள் சந்தித்து முஃமின்களின் உயிரை இலகுவாக கைப்பற்றுங்கள் என்று கோரிக்கை வைத்தபோது அதற்கு மலக்குல் மவ்த் “நான் எப்போதும் முஃமினின் உயிரை இலகுவாகவே கைப்பற்றுகிறேன்” என்றார்கள்.   

படிப்பினை 2- நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் முதலில் நரையைப் பார்த்தவர்கள் அதற்கு முன்பு எத்தனை வயதை ஒருவர் அடைந்தாலும் முடி கருப்பாகவே இருக்கும். நரை என்பது அப்போது இருந்திருக்கவில்லை. நரைக்கு கறுப்புச் சாயம் பூசி கறுப்பாக்கக் கூடாது.            

மற்றொரு அற்புதம்

وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ- وذلك أنهم لما أحيا لهم الموتى طلبوا منه آية أخرى وقالوا: أخبرنا بما نأكل في بيوتنا وما ندخر للغد، فأخبرهم فقال: يا فلان أنت أكلت كذا وكذا، وأنت أكلت كذا وكذا وادخرت كذا وكذا (قرطبي)

  பல்வேறு அற்புதங்களை செய்து காட்டியும் அந்த மக்கள் திருப்தியடையாமல் நாங்கள் எங்களுடைய வீடுகளில் என்ன உணவு சாப்பிட்டோம். நாளை என்ன உணவு சாப்பிடுவதற்கு தயார் செய்து வைத்துள்ளோம்என்று இங்கிருந்து கொண்டே சொல்லும்படி ஈஸா(அலை) அவர்களிடம் கேட்க, அதையும் ஈஸா (அலை) அவர்கள் அறிவித்தார்கள். (குர்துபீ)                                      

நபி (ஸல்) அவர்களைப் பற்றி பைபிளின் முன்னறிவிப்புகள்

  நபி (ஸல்) அவர்களைப் பற்றி நபி ஈஸா (அலை) கூறிய முன்னறிவிப்புகள் பைபிளில் இருந்தாலும் அவைகளின் அர்த்தத்தை மாற்றி மொழி பெயர்ப்பு செய்துள்ளனர்.                          

பைபிளில் இடம் பெற்றுள்ள வாசகம் பின்வருமாறு.

 நான் பிதாவை வேண்டிக் கொள்வேன். அப்போது அவர் என்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்கு சத்திய ஆவியாக தேற்றரவாளரை உங்களுக்குத் தந்தருள்வார். (யோவான் 14:16)   

  

 மற்றொரு இடத்தில் இடம் பெற்றுள்ள வரிகள். 'பிதாவிடத்திலிருந்து உங்களுக்கு அனுப்பப் படுபவரும், பிதாவிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்தியஆவியான தேற்றரவாளர் வரும்போது, என்னைக் குறித்து அவர் சாட்சி கொடுப்பார்'. (யோவான் 15:26)                      

 'அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி,. உன்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்கு அவர்களுடையசகோதரர்களிடமிருந்து எழும்பப்பண்ணி,என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதை யெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்திலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகேடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்'(உபாகமம் 18:17-19) மேற்காணும் பைபிளின் வாசகங்கள் குர்ஆனில் பல்வேறு இடங்களில் கூறப்பட்டுள்ளது.           

لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ (164) ال عمران

  நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு இறைத்தூதரை அனுப்பியதன் மூலம் அருள் புரிந்தான். அவர் அந்த முஃமின்களுக்கு அல்லாஹ்வின் வசனங்களை ஓதிக் காட்டுவார்.     

- ஆல இம்ரான் 164

وَإِذْ قَالَ عِيسَى بْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ (الصف:6

 நபி ஈஸா(அலை) பனீஇஸ்ராயீல் சமூகத்தை நோக்கி நான் உங்களின் இறைத் தூதராக இருக்கிறேன். முந்தைய தவ்ராத் வேதத்தை உண்மைப் படுத்துபவராகவும் எனக்கு அடுத்து வரப்போகும் இறைத் தூதரைப் பற்றிய சுபச் செய்தியைச் சொல்பவராகவும் அனுப்பப்பட்டுள்ளேன். அவரின் பெயர் அஹ்மத் என்பதாகும்.- சூரா ஸஃப் 6                                                           

 அஹ்மத் என்ற நபி (ஸல்) அவர்களின் பெயரைத் திரித்து தேற்றரவாளர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தேற்றரவாளர் யார் என்பதற்கு கிறிஸ்தவ அறிஞர்கள் “இது இயேசுவைப் பற்றி அவருக்கு முன்பிருந்த மோஸஸ் (மூஸா நபி) கூறியது என்பார்கள்.

 

Popular posts from this blog

குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்களும்,அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்… 13-06-2024

பைத்துல் முகத்தஸ்