மழை 24-05-2024



வானமே திறந்து ஊற்றுகிறதோ? உலகின் நாலா பாகங்களிலும் சிதறிக் கிடந்த மேகத்துண்டுகளெல்லாம் ஒன்று திரண்டு தமிழகத்தில் மொத்தமாக மழையைக் கொட்டியதோ? என்று நினைக்கும் அளவிற்கு தமிழகமெங்கும் பரவலாக பலத்த பெருமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

அதிலும் குறிப்பாக நம் மாவட்டத்தில் ஊரே  வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.

பார்க்கிற இடங்களிலெல்லாம் தண்ணீர், தண்ணீர் என்ற நிலை ஆகி விவசாய நிலங்களில் விதைக்கப்பட்ட விதைகள் எங்கே அழுகிவிடுமோ என்று அஞ்சி விழிப்பிதுங்கி நிற்கிறார்கள் விவசாயிகள்.

மார்ச் முதல் மே வரை பொழியக்கூடிய கோடை மழை கடந்தாண்டை விட  10 சதவீதத்திற்கும் அதிகமாக  பெய்திருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இது அதிகரிக்கக்கூடும் எனவும் அகில இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஆனாலும், மாதம் மும்மாரி மழை பொழிந்த வளம்மிக்க நாடாகத்தானே நம் தமிழ்நாடு இருந்துள்ளது. அப்போதெல்லாம் தண்ணீருக்கும் பிரச்சனை இல்லை. தண்ணீராலும் பிரச்சனை இல்லை.

பின்னர் ஏன் இப்படி? மழை செய்த பிழையாக இருக்குமோ? என்றெல்லாம் நமக்கு பலவாறாக எண்ணத்தோன்றுகிறது.

ஆம்! பிழை எங்கு நிகழ்ந்திருக்கிறது என்பதை கண்டறிந்து சரி செய்து, இது போன்ற கடும் மழையின் கோரத்தாண்டவத்திலிருந்து  மீண்டு வரும் பாடத்தைக் கற்று வருவோம்!


الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ ﴿2:22﴾
 அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதனைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனி வர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகின்றான். ஆகவே (இவைகளையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்.(அல் குர்ஆன் 2.22)

மனிதன் இறைவனால் சோதிக்கப்படுக்கப்படுகிறான் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை.
கவனமாகவும்,முன்னெச்சரிக்கையாகவும் தனது வாழ்வை நடத்த முற்படும்போது,சோதனைகள்,வேதனைகள் வராமல் மனிதனால் தப்பிக்க இயல்வதில்லை.ஜாதி,மதங்கள் பாராமல் எல்லா அடியார்களுக்கும் இறைவன் சோதனைகளையும்,வேதனைகளையும் அனுபவிக்கும்படிச் செய்கிறான்.
ஒவ்வொரு சோதனைகள்,வேதனையிலிருந்து பாடம் பெற்று வெற்றி பெற முயற்சிக்க வேண்டுமே தவிர இறைவனைப் பயந்து நடக்கும் நமக்கும் சோதனைகள் வந்து விட்டனவே என்று கைசேதப்படுவது மடைமையாகும்.
அறியாமையாகும்.
நம்மைப் பார்த்து இறைவன் இவ்வாறு கேள்வி எழுப்புகிறான்.
 أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ
நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம் என்று கூறினால் (போதும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக்கொண்டார்களா? (அல்குர்ஆன் 29:2)

எனவே அல்லாஹ்வின் சோதனை என்பது தவிர்க்க முடியாத ஒன்று.அது எப்படி நிகழும் என உறுதியிட்டுக் கூறமுடியாது.நமது முன்னேற்பாடுகளால் தடுத்து நிறுத்திட இயலாது.செல்வதைக் கொடுத்தும் சோதிக்கலாம்,செல்வங்களை அழித்தும் சோதிக்கலாம், சுருங்கச் சொன்னால் நெருப்பு,காற்று,நீர்,நிலம் இவைகளைக் கொண்டும் சோதிக்கலாம்.
சில சோதனைகளை நாம் எளிதில் ஜீரணித்துக்கொள்ள முடிகிறது.சில சோதனைகள் நமது உள்ளம் தாங்க முடியா வேதனைகளாக மாறி விடுகிறது.நல்லடியார்களை பக்குவப்படுத்த சோதிக்கும் இறைவன் தனிமனித பாவங்கள்,.அனாச்சாரங்கள் பெருகும் போது மனிதனால் தாங்க முடியாத வேதனைகளை இறக்குகின்றான்.

மழை எப்படி உருவாகின்றது?

கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது சூரியனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவதும் உண்டு. இந்த அற்புதத்தைத் தான் அல்லாஹ் 'சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை' (15:22) என்று கூறுகிறான்.

மேலே சென்ற நீராவி, அந்தரத்தில் மேகமாக எமக்குக் காட்சி தருகின்றது. மேகமானது இழுத்து இணைக்கப்பட்டு பெரும் பனிக்கட்டிகளாக உருமாறி விடுகின்றது. இந்தப் பனிக்கட்டிகள் 1000 அடி முதல் 30.000 அடி வரை உயர்கின்றது. இதனை இன்றைய விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். 30.000 அடி என்பது 9 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இது உலகின் பெரிய மலையான இமயமலையின் உயரத்தை விட அதிகமானதாகும். இன்றைய விஞ்ஞானிகளே வியக்கும் இந்தப் பேருண்மையை அல்லாஹ் அல்குர்ஆனில் சொல்வதைப் பாருங்கள்!

அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது' (24:43)

இடி ஏற்படுவது எப்படி?

மழை பெய்யக்கூடிய கால கட்டங்களில் இடி இடிப்பதை நாம் உணர்கிறோம். இடி விழுந்து பலர் இறந்து போவதையும் பல கட்டடங்களை நொருங்கி விடுவதையும் மரங்கள் வயல் நிலங்கள் உருத்தெரியாமல் குலைந்து போவதையும் அடிக்கடி ஊடகங்களின் வாயிலாக தெரிந்து கொள்கின்றோம். இந்த இடி எவ்வாறு உருவாகின்றது? என்பதை அலசும் போது அல்லாஹ்வின் வல்லமையை நாம் உணரலாம். மழையும், வெயிலும் இல்லாமல் குளிர்ச்சியான காற்று திடீரென பூமியில் இருந்து மேலே எழும்பும். அந்தக் காற்று ஈரமாக இருப்பதால் அது மேலே செல்வதற்கு ஒரு சக்தி வேண்டும். அந்த சக்தியை குளிர்ந்த காற்று தனக்குள் இருந்தே எடுத்துக் கொள்ளும். இந்த ஈரக்காற்று குளிர்ச்சி அடைந்து நீர்த்துளிகள் அதாவது மேகங்கள் உருவாகின்றன. இந்த நீர்த்துளிகள் மேலே சென்று ஏற்கனவே அங்கிருக்கும் மேகங்களுடன் உராயும்போது 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டிகிரி செண்டிகிரேடு வரை வெப்பம் உருவாகும். இந்த வெப்பத்தினால் அந்தப் பகுதி விரிவடைந்து வெளிச்சமும், சத்தமும் உருவாகிறது. ஒளியை மின்னலென்றும், ஒலியை இடியென்றும் சொல்கிறோம். மேகங்கள் வேகமாக மோதிக்கொள்ளும் போது 10 மில்லியன் கிலோவோட்ஸ் அளவுக்கு மின்சக்தி உருவாகும்.

இடி என்றால் என்ன? மின்னல் என்றால் என்ன?' என்று ஆராய்ச்சி செய்வதை நினைத்துக் கூடப் பார்க்காத அரேபிய சமுதாயத்தில் அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டிய அருள்மறையில் 'இடி' பற்றி அல்லாஹ் இப்படிச் சொல்கிறான்.

அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான். இடியும் அவனைப் புகழ்ந்து போற்றுகிறது. அவனைப் பற்றிய அச்சத்தினால் வானவர்களும் (புகழ்ந்து போற்றுகின்றனர்). இடி முழக்கங்களையும் அவனே அனுப்புகிறான். தான் நாடியோரை அவற்றின் மூலம் தண்டிக்கிறான். அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றனர். அவன் வலிமைமிக்கவன். (13:12,13)

மழை அல்லாஹ்வின் அருள்

'அவனே வானத்திலிருந்து உங்களுக்காகத் தண்ணீரை இறக்கினான். அதில் குடிநீரும் உண்டு. நீங்கள் மேய்ப்பதற்கான தாவரங்களும் அதனால் கிடைக்கின்றன.' (16:10)


ஹழ்ரத் அனஸ் (ரலி)அவர்கள் கூறியதாவது:
நபி(ஸல்)அவர்களது காலத்தில் மதினவாசிகளை பஞ்சம் பீடித்தது..(அந்தக் காலக்கட்டத்தில்)நபி(ஸல்)அவர்கள் ஒரு ஜுமுஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு(நாட்டுப்புற)மனிதர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே!(பஞ்சத்தால்)குதிரைகள் அழிந்து விட்டன.ஆடுகளும் அழிந்து விட்டன.ஆகவே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்அவன் மழை பொழியச் செய்வான் என்று கேட்டார்.உடனே .நபி(ஸல்)அவர்கள் தமது கையை உயர்த்திப் பிரார்த்தனைச் செய்தார்கள்.அப்போது வானம் (மேகங்கள் இல்லாமல்)கண்ணாடியைப்போன்றிருந்து.நபி(ஸல்)அவர்கள் பிரார்தித்தவுடன் காற்று ஒன்று வேகமாக வீசி மேகக்கூட்டத்தை தோற்றுவித்தது.பிறகு அந்த மேகக்கூட்டம் ஒன்று திரண்டு மழையைப்பொழிவித்தது.நாங்கள் தண்ணீரில் மூழ்கியபடி (பள்ளிவாசலிருந்து)வெளியே வந்து எங்கள் இல்லங்களை அடைந்தோம்.அடுத்த ஜுமுஆ (நாள்)வரை எங்களுக்கு மழை பொழிந்து கொண்டேயிருந்தது.அந்த மனிதர் அல்லது வேறொரு மனிதர் நபி(ஸல்)அவர்களது முன் எழுந்து நின்று அல்லாஹ்வின் தூதரே!(அடைமழையின் காரணத்தால்)வீடுகள் இடிந்து விட்டன.ஆகவே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.அவன் மழையை நிறுத்திவிடுவான்.என்று சொன்னார்.அதைக் கேட்ட நபி(ஸல்)அவர்கள் புன்னகை புரிந்து اللَّهُمَّ حَوَالَيْنَا ، وَلا عَلَيْنَا
இறைவா!எங்களைச் சுற்றிலும் (எங்களுக்கு நன்மை ஏற்படும் விதத்தில்)
மழையை பொழியவை!எங்கள் மீது (எங்களுக்கு கேடு நேரும் விதத்தில்)மழையை பொழியைச் செய்யாதே!என்று பிரார்த்தித்தார்கள்.நான் மேகத்தை நோக்கினேன் அது பிளவுபட்டு மதீனாவைச் சுற்றிலும் ஒரு மாலைபோல் வலையமிட்டிருந்தது
(.நூல் :புகாரி)

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (சூறாவளிக்) காற்று, மழைமேகம் ஆகியவை மிகுந்துள்ள நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒரு விதமான கலக்கம்) தென்படும்; முன்னும் பின்னும் நடப்பார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பு) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும்; மகிழ்ச்சி வந்துவிடும். நான் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டதற்கு, ”அது என் சமுதாயத்தார்மீது சாட்டப்பட்ட (இறைவனின்) வேதனையாக இருக்குமோ என்று நான் அஞ்சினேன்” என்று விடையளித்தார்கள். அவர்கள் மழையைக் காணும்போது ”(இது இறைவனின்) அருள்” என்று கூறுவார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்)

நபி அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் காட்டுப்பகுதியில் இருக்கும்போது இன்னாரின் தோட்டத்திற்கு நீர் பொழிவாயாக என்ற சப்தத்தைக் மேகத்திலிருந்து கேட்டார். உடனே அந்த மேகம் அங்கிருந்து நகர்ந்து கருங்கற்கள் நிறைந்த பகுதியில் மழை கொட்டியது. உடனே அங்கிருந்த வாய்க்கால் ஒன்றில் அந்த தண்ணீர் நிரம்பி ஓடலாயிற்று . அம்மனிதர்அந்த தண்ணீரை பின் தொடர்ந்து சென்றார். அங்கு ஒருவர் தனது தோட்டத்தில் நின்று கொண்டு மண்வெட்டியால் அத்தண்ணீரைத் தன் தோட்டத்திற்குத் திருப்பிவிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் அடியானே! உனது பெயர் என்ன? என்று கேட்டார், அதற்கு அவர் மேகத்தில் கேட்ட அதே பெயரைக் கூறினார். பின்பு அவர், அல்லாஹ்வின் அடியானே! எனது பெயரை ஏன்கேட்கிறீர்? என்று கேட்டார். அதற்கு அவர், இத்தண்ணீரைப் பொழிந்த மேகத்தில் இன்னாரின் தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றுவாயாக! என்று உமது பெயரை குறிப்பிட்டு ஒரு சப்தத்தை நான் செவியேற்றேன்.
இத்தோட்டத்தில் (மழை பொழிய) நீர் என்னசெய்வீர்?எனக் கேட்டார். அதற்கு அந்த மனிதர், அது பற்றிக் கேட்டு விட்டதால் கூறுகிறேன். நான் இதிலிருந்து கிடைக்கும் விளைச்சலை மூன்று பாகங்களாகப் பிரித்து, அதில் ஒன்றை தர்மம் செய்து விடுகிறேன்; மற்றொரு பாகத்தை நானும் எனது குடும்பத்தினரும் உண்ணுகிறோம், மீதமுள்ள ஒன்றை இந்நிலத்தில் (பயிரிட) போட்டு விடுகிறேன் என்று கூறினார். (முஸ்லிம்) மழை பொழிய உண்மையான காரணம்
மழை வருவதும் வராமல் இருப்பதும் வானியல் நிலை மாறிவிடுவதாலோ அல்லது பருவக்காற்று பலமாக வீசுவதாலோ அல்ல. மாறாக, அல்லாஹ்வின் உத்தரவின்படி அது பொழிகிறது. அல்லாஹ்வின் உத்தரவின்படி அது நின்றுவிடுகிறது. இதைத்தான் அல்லாஹ் இப்படிக் கேட்கிறான்: நீங்கள் குடிக்கும் நீரை கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நாடினால் அதை உப்புக் கரிக்கும் நீராக ஆக்கியிருப்போம். (இவற்றுக்கு) நீங்கள் நன்றி செலுத்தவேண்டாமா? (அல்குர்ஆன் 56:68-70)

 அல்லாஹ்வின் உத்தரவு அடியார்களின் செயலுக்கேற்றவாறு மாறுபடுகிறது. அடியார்கள் நற்செயல்கள் புரியும்போது மழையைப் பொழிய வைக்கிறான்.
இதுவும் அல்லாஹ்வின் அருள் மழை.
(நூல்:முஸ்லிம்) 


அருள் மழையின்றி அழியும் மழையா?

ஆம்!பாவம் செய்யும்போது......

அளவோடு பொழிந்தால் அருள் என்பதுபோன்றே அத்துமீறிப் பெய்ந்தால் அது சோதனையாக மாறிவிடும். நூஹ் நபியின் சமூகம் கொடூரமாக மழை பொழிந்து ஏற்பட்ட வெள்ளத்தின் மூலம்தான் அழிக்கப்பட்டார்கள். மழைவரும்போது நபியவர்களின் நிலை பற்றி ஆயிஷா (ரலி) கூறுவதை அவதானியுங்கள். “மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி(ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒருநாள்) நான், 'இறைத்தூதர் அவர்களே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. ('ஆத்' எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, 'இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்' என்றே கூறினர்' என பதிலளித்தார்கள்.” (புஹாரி)
இதனால்தான் அதிகமாக மழை பெய்யும்போது “எமக்குப் போதும் ஏனைய பகுதிகளுக்கு அதனைப் பொழியச்செய்வாயாக” என்று கூறுமாறுதான் நபிகளார் اللَّهُمَّ حَوَالَيْنَا ، وَلا عَلَيْنَا
 “அல்லாஹும்ம ஹவாலைய்னா, வல அலைனா” என்ற துஆவைக் கற்றுத்தந்தார்கள்.

நாம் செய்யும் பாவத்தின் காரணமாக, அருள் மழை அழியும் மழையாக பொழியும் நிலை உருவாகும் சூழ்நிலை.இக்கால சூழ்நிலை மிகவும் மோசமான பாவத்தின் உச்சக்கட்டங்கள்(.நஊது பில்லாஹ்)
பாவங்கள் புரியும்போது மழையை தடுத்துவிடுகிறான். 
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருமுறை நபி அவர்கள் எங்களை நோக்கி, ஓ முஹாஜிரீன்களே! ஐந்து காரியங்கள் உள்ளன. அல்லாஹ் காப்பாற்றுவானாக! அவற்றில் நீங்கள் மூழ்கிவிட்டால் வேதனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள். அவை:
1) எந்த சமுதாயத்தில் விபச்சாரம் பகிரங்கமாக நடைபெறும் அளவிற்கு பரவலாகிவிடுமோ அப்போது முன்னால் கேள்விப்படாத காலரா போன்ற புதுமையான நோய்கள் பரவும்.
2) அளவு, நிறுவைகளில் குறைபாடு செய்பவர்களுக்கு பஞ்சம், சிரமம் ஏற்படும். மேலும் அநியாயக்கார அரசன் சாட்டப்படுவான்.
3) ஜகாத் கொடுக்காமல் தடுத்து வைத்துக் கொண்டால் வானிலிருந்து வரும் மழை அவர்களுக்கு தடுக்கப்படும். மிருகங்கள் மட்டும் இல்லையெனில் அவர்களுக்கு அறவே மழை பொழியாது.
4) அல்லாஹ் மற்றும் அவனது தூதருடன் செய்து கொண்ட வாக்குறுதியை முறித்துவிட்டால் அவர்கள் மீது அல்லாஹ் விரோதிகளை சாட்டிவிடுவான். அவர்களிடமுள்ளதை விரோதிகள் கைப்பற்றிக் கொள்வார்கள்.

5) அல்லாஹ்வின் வேதத்தின்படி இல்லாமல் தங்களின் மனோ இச்சைபடி தலைவர்கள் தீர்ப்பு வழங்கினால் அல்லாஹ் அவர்களுக்கிடையே சண்டைகளை உண்டாக்கிவிடுவான். (இப்னுமாஜா)

பாவத்திற்கு தண்டனை உண்டு இந்த நபிமொழியில் மழை பொழியாமல் வறட்சி, பஞ்சம் ஏற்படுவதற்கு இரு காரணங்கள் கூறப்பட்டுள்ளன. ஒன்று அளவு, நிறுவைகளில் மோசடி செய்வது. இரண்டு, ஜகாத் கொடுக்காமல் இருப்பது. இவ்விரு காரணங்களிலும் அடுத்தவர்களுக்குச் சேரவேண்டியதை ஏதேனும் ஒரு வழியில் அபகரித்துக் கொள்வதையே குறிக்கப்பட்டுள்ளது. எனவே திருடுவது, ஏமாற்றுவது, கொள்ளையடிப்பது, கலப்படம் செய்வது, மோசடி செய்வது போன்ற எந்த வழியில் அடுத்தவர் பொருளை அபகரித்துக் கொண்டாலும் அவையனைத்தும் இந்த நபிமொழி எச்சரிக்கையின் கீழ் வந்துவிடும். மனிதன் பாவம் செய்தால் அதற்குரிய தண்டனையைப் பெற்றே தீருவான். மழை தடுக்கப்படுவதும், வறட்சி, பஞ்சம் ஏற்படுவதும் அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றாகும். ஃபிர்அவ்னின் கூட்டத்தார் நல்லுணர்வு பெறுவதற்காக, பஞ்சம் பிடிக்கச் செய்து, விவசாயப் பலன்களைக் குறைத்து தண்டித்தோம் (7:130) என்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். மழை பொழிய பாவமன்னிப்பு அவசியம் தௌபா செய்து பாவத்திலிருந்து மீண்டு, பாவமன்னிப்புக் கோரினால்தான் அடியானின் பாவங்கள் மன்னிக்கப்படும். பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டால் தண்டனைகள் விலக்கிக் கொள்ளப்படும். அப்போது மழை பொழியும். எனவேதான் நபியவர்களுக்கு முன்னால் வந்த நபிமார்களும் மழை தடுக்கப்பட்டிருக்கும் காலத்தில் தனது சமுதாயத்தாரிடம் பாவமன்னிப்புத் தேடுமாறு கோரினார்கள்.
  فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا
மேலும், "நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்" என்றுங் கூறினேன்
  (அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.
அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.(அல் குர்ஆன் 71-10,11,12)
மழையை திட்டாதீர்கள் 

தொடர்ந்து பெய்யும் மழையை யாரும் சனியன் புடிச்ச மழை விடமாட்டேன்குது என்று திட்டாதீர்கள்.
இறைவனின் அருட்கொடை மழை ரூபத்தில் நமக்கு இறங்கிகொண்டு இருக்கிறது.
இந்த மழையினால் ஏற்படும் உயிர் இழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளுக்கு மனிதனின் தவறுதான் காரணம்.மழையை குற்றம் சொல்லகூடாது.
மனிதன் தன்னுடைய சுயநலத்திற்காக குளங்களையும்,ஏரிகளையும் மேடாக்கி வீடு,தொழில்சாலை கட்டிகொள்கிறான்.நீர் வழித்தடங்களை முறையாக சுத்தம் செய்து தூர் வாராமல் விட்டதால் சென்னை போன்ற பெருநகரங்கள் சிறு மழை பெய்தாலே நரகங்களாக மாறிவிடுகிறது.
20 வருங்களுக்கு முன்பு பெய்த மழை அளவில் 20% கூட இப்போது மழை பொழிவதில்லை.ஆனால் இழப்புகள் மட்டும் மிக அதிகமாகி விட்டது.
இறைவன் தன் திருமறையில் أأنتم أنزلتموه من المزن ام نحن المنزلين 
அதை மேகத்திலிருந்து நீங்கள் இறக்குகின்றீர்களா? அல்லது நாம்தாம் இறக்கிவைப்பவர்களா?
لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ 
நாம் நாடினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத)உப்பு நீராக்கி இருப்போம்.(இதற்கு)நீங்கள் நன்றி செலுத்தவேண்டாமா?
                                               அல் குர்ஆன்:56-69,70)

சுகாதாரம் இல்லாததால் வந்த விளைவுகள் 
இயற்கையின் அமைப்பில் ஒரு கோளாறும் இல்லை. மழை பெய்ய வேண்டிய காலத்தில் தான் பெய்கிறது.
மழை தண்ணீர் போக்கில் குறுக்கிடாமல் இருந்திருந்தால் இவ்வளவு கடுமையான சேதம் இருந்திருக்காது.
ஏரிகளையும், கண்மாய்களையும், குளங்களையும் பிளாட் போட்டு விற்று விட்டோம்.
ஆற்றங்கரைகளையும், ஏரிக்கரைகளையும், குளக்கரைகளையும், வாய்க்கால், வடிகால் கரைகளையும் ஆக்கிரமித்துவிட்டோம். ஆறுகளும், ஏரிகளும், குளங்களும், வாய்க்கால் ,வடிகால்களும் இன்று சுருங்கிவிட்டன.
முன்பு ஊருக்கு குறைந்தது பத்து குட்டைகளாவது இருக்கும், அவையெல்லாம் எங்கே?
பின் மழைநீர் எங்குதான் செல்லும்?

"ஆஹா! மழை நன்றாக பொழிகிறது , விவசாயம் தழைக்கட்டும், நிலத்தடி நீர் மட்டம் உயரட்டும், குடிநீர் தட்டுப்பாடு நீங்கட்டும் என்று நினைக்கவோ, வாழ்த்தவோ ஆளில்லை."

ஐயோ மழை கொட்டுகிறது, ஐயய்யோ தண்ணீர் புகுந்துவிட்டது என்று எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் ஒரே புலம்பல். இது என்ன எண்ணம்? என்ன நேர்ந்துவிட்டது நமக்கு ? (விடாது மழை பெய்யும் (கேரளா போன்று) மாநிலங்களில் இந்த புலம்பல் இல்லை. இது எங்கே போய் முடியப்போகிறதோ.

தண்ணீர் மனிதனுக்கு மாத்திரமல்ல உயிரினங்கள், தாவரங்கள், விலங்கினங்கள் என படைப்பினங்கள் அனைத்திற்கும் இன்றியமையாத ஒன்றாகும்.

அந்த தண்ணீரை மழை நீர் எனும் நன்னீர் மூலம் அல்லாஹ் வழங்கி உயிரினங்களை வாழ வைக்கின்றான்.

இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டுமானால் உயிரினங்கள் அனைத்தும் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டே படைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது இஸ்லாம்.

وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ

“உயிரினங்கள் அனைத்தையும் நாம் தண்ணீரைக் கொண்டே உருவாக்கினோம்”. (அல்குர்ஆன்: 21: 30 )

وَاللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِنْ مَاءٍ فَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى بَطْنِهِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى رِجْلَيْنِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى أَرْبَعٍ يَخْلُقُ اللَّهُ مَا يَشَاءُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

“அல்லாஹ் அனைத்துப் பிராணிகளையும் தண்ணீரிலிருந்தே படைத்தான்”. ( அல்குர்ஆன்: 24: 45 )

மழையை பரக்கத் அபிவிருத்தி என்கிறது அல்குர்ஆன்….

وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنْبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ () وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ () رِزْقًا لِلْعِبَادِ وَأَحْيَيْنَا بِهِ بَلْدَةً مَيْتًا كَذَلِكَ الْخُرُوجُ ()

“மேலும், நாம் வானத்திலிருந்து அபிவிருத்திகள் நிறைந்த மழை நீரை இறக்கினோம். பின்னர், அதன் மூலம் தோட்டங்களையும், அறுவடைத் தானியங்களையும், கனிகள் நிறைந்து, குலைகள் அடுக்கடுக்காய் தொங்குகின்ற நீண்ட நெடிய பேரீச்சை மரங்களையும் முளைக்கச் செய்தோம். இது மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கான அழகிய ஏற்பாடாகும். இறந்து கிடக்கும் ஒரு பூமிக்கு நாம் இந்த நீரினால் உயிரூட்டுகின்றோம். இறந்து விட்ட மனிதர்கள் பூமியிலிருந்து வெளிப்படுவதும் இவ்விதமேயாகும்”. ( அல்குர்ஆன்: 50: 9 – 11 )

மழையை ரஹ்மத் - அருள்வளம் என்கிறது அல்குர்ஆன்…..

وَهُوَ الَّذِي يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ حَتَّى إِذَا أَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنَاهُ لِبَلَدٍ مَيِّتٍ فَأَنْزَلْنَا بِهِ الْمَاءَ فَأَخْرَجْنَا بِهِ مِنْ كُلِّ الثَّمَرَاتِ كَذَلِكَ نُخْرِجُ الْمَوْتَى لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ()

“மேலும், அவனே தன்னுடைய அருள்வளத்திற்கு ( மழைக்கு ) முன்பாக நற்செய்திகளைக் கொண்ட காற்றுகளை அனுப்புகின்றான்”. ( அல்குர்ஆன்: 7: 57 )

மழையை தஹூர் - தூய்மை என்கிறது அல்குர்ஆன்….

وَأَنْزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا

“மேலும், வானிலிருந்து தூய்மையான ( மழை ) நீரை நாம் இறக்கி வைக்கின்றோம்”. ( அல்குர்ஆன்: 25: 48 )

மழை ரிபாத்துல் குலூப் - இதயங்களை வலுப்படுத்தும் உயரிய அம்சம் என்கிறது அல்குர்ஆன்….

إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَى قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ

“இதையும் நினைத்துப் பாருங்கள்! அல்லாஹ் உங்களைச் சிற்றுறக்கம் கொள்ளச் செய்து தன் சார்பிலிருந்து உங்களுக்கு மன நிம்மதியையும், அச்சமின்மையையும் ஏற்படுத்தினான். மேலும், உங்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவும், ஷைத்தான் ஏற்படுத்திய அசுத்தங்களை உங்களை விட்டு அகற்றுவதற்காகவும், உங்கள் இதயங்களை வலுப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் உங்கள் பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும் வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் பொழியச் செய்தான்”. ( அல்குர்ஆன்: 8: 11 )

பத்ரில் அல்லாஹ் முஃமின்களுக்கு மட்டும் வழங்கிய பிரத்யேகமான மழையை நினைவு கூறச் சொல்கின்றான்.

மழை வாழ்க்கைக்கான சாதனங்களை வழங்கும் மாபெரும் கொடை என்கிறது அல்குர்ஆன்….

يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا (11) وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا (12)

“உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள்! சந்தேகமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான். அவன் உங்கள் மீது வானத்திலிருந்து நிறைய மழையைப் பொழியச் செய்வான். செல்வத்தையும் சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காக தோட்டங்களை உருவாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் ஓடச்செய்வான்”. ( அல்குர்ஆன்: 71: 10 – 12 )

மழைநீர் உலகத்தோடு முடிந்து விடும் ஒன்றல்ல மறுமையிலும் மனிதனோடு அதன் உறவைத் தொடர்கின்றது.

قال رسول الله
صلى الله عليه و سلم أن جسد الأنسان يبلى كله فيما عدا "عجب الذنب" فإذا أراد الله تعالى بعث الناس أنزل مطراً من السماء فينبت كل فرد من عجب ذنبه كما تنبت البقلة من بذرتها رواه مسلم كتاب الفتن و أشراط الساعة

மஹ்ஷர் மைதானம் அமையப் பெற்ற பிறகு அல்லாஹ் வானத்திலிருந்து ஒரு மழையை பொழியச் செய்வான். உடனே இறந்தவர்கள் பச்சைப்புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று மண்ணறையிலிருந்து உயிர்த்தெழுவார்கள். ஆதமுடைய மகனின் உடலிலுள்ள அனைத்துப் பகுதிகளையும் மண் தின்று விடும். அவனுடைய முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும் குத எழும்பின் நுனியைத்தவிர, அதை வைத்தே அல்லாஹ் மீண்டும் மனித சமூகத்தை உயிர்த்தெழுப்புவான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )


அல்லாஹ் மழையை இவ்வளவு மாண்பாக வர்ணித்துக் கூறும் போது ஏன் இவ்வளவு பெரிய இழப்புகளை நாம் சந்திக்க நேரிடுகின்றது.

அல்லாஹ் மனிதனுக்கு வழங்குகின்ற அனைத்து விஷயங்களையும் ஒரு குறிப்பிட்ட நிர்ணயத்தின், நியதியின் அடிப்படையில் தான் வழங்குகின்றான்.


إنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ

அல்லாஹ் கூறுகின்றான்: ”நிச்சயமாக! நாம் ஒவ்வொரு பொருட்களையும் ஒரு குறிப்பிட்ட விதிமுறையின் படி இயங்குவதாகவே படைத்திருக்கின்றோம்.”

மழையும் அப்படித்தான்..

وَالَّذِي نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ

“எனினும், அவன் வானத்திலிருந்து அளவுடன் தான் தண்ணீரை ( மழையை ) இறக்கி வைக்கின்றான்”. ( அல்குர்ஆன்: 43: 11 )


மழை வரும்போது நபியவர்களின் மனோ நிலை…

و حَدَّثَنِي هَارُونُ بْنُ مَعْرُوفٍ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ ح و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ أَبَا النَّضْرِ حَدَّثَهُ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا قَالَتْ
مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْتَجْمِعًا ضَاحِكًا حَتَّى أَرَى مِنْهُ لَهَوَاتِهِ إِنَّمَا كَانَ يَتَبَسَّمُ قَالَتْ وَكَانَ إِذَا رَأَى غَيْمًا أَوْ رِيحًا عُرِفَ ذَلِكَ فِي وَجْهِهِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَرَى النَّاسَ إِذَا رَأَوْا الْغَيْمَ فَرِحُوا رَجَاءَ أَنْ يَكُونَ فِيهِ الْمَطَرُ وَأَرَاكَ إِذَا رَأَيْتَهُ عَرَفْتُ فِي وَجْهِكَ الْكَرَاهِيَةَ قَالَتْ فَقَالَ يَا عَائِشَةُ مَا يُؤَمِّنُنِي أَنْ يَكُونَ فِيهِ عَذَابٌ قَدْ عُذِّبَ قَوْمٌ بِالرِّيحِ وَقَدْ رَأَى قَوْمٌ الْعَذَابَ فَقَالُوا
{ هَذَا عَارِضٌ مُمْطِرُنَا }

ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

“மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி(ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒருநாள்) நான், 'அல்லாஹ்வின்தூதர் அவர்களே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்களோ மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் அடைக்கின்றீர்களே ஏன்?” என்று கேட்டேன்.

அதற்கு நபி {ஸல்} அவர்கள் ”ஆயிஷாவே! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. ('ஆத்' எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, ”இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்” என்றே கூறினர்” என பதிலளித்தார்கள்.
( நூல்: முஸ்லிம் )

حَدَّثَنَا مُحَمَّدٌ - هُوَ ابْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ الْمَرْوَزِىُّ - قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - كَانَ إِذَا رَأَى الْمَطَرَ قَالَ « صَيِّبًا نَافِعًا

நபி(ஸல்) அவர்களின் கண்கள் மழையைக் காணும்போது அவர்களின் நாவு இப்படிப் பிரார்த்திக்க ஆரம்பித்து விடும் ”அல்லாஹும்ம ஸைய்யிபன் நாஃபிஆ – யாஅல்லாஹ்! இந்த மழையைப் பயனுள்ள மழையாக ஆக்குவாயாக!" என்று...

                                                            ( நூல்: புகாரி )

ஆனால், நாமோ இன்று மழை மேகத்தை கண்டுவிட்டால் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த மேகம் சுமந்து வருகிற மழை அல்லாஹ்வின் அருள் மழையா? அல்லது அல்லாஹ்வின் தண்டனைக்குரிய மழையா? என்றெல்லாம் நாம் கவலைப்படுவதில்லை. அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் இல்லை. இது தான் இன்றைய நமது நிலை.

ஆனால், அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள், முன்னர் வாழ்ந்த சமூகத்தார் அல்லாஹ்வால் அழிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு கலக்கம் அடைகிறார்கள்.

மழையின் பாதிப்பிலிருந்து பாதுகாவல் தேட வேண்டும்...

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ قَالَ أَخْبَرَنَا الأَوْزَاعِىُّ قَالَ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِى طَلْحَةَ الأَنْصَارِىُّ قَالَ حَدَّثَنِى أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ أَصَابَتِ النَّاسَ سَنَةٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - فَبَيْنَا رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ قَامَ أَعْرَابِىٌّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ، هَلَكَ الْمَالُ وَجَاعَ الْعِيَالُ ، فَادْعُ اللَّهَ لَنَا أَنْ يَسْقِيَنَا . قَالَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يَدَيْهِ ، وَمَا فِى السَّمَاءِ قَزَعَةٌ ، قَالَ فَثَارَ سَحَابٌ أَمْثَالُ الْجِبَالِ ، ثُمَّ لَمْ يَنْزِلْ عَنْ مِنْبَرِهِ حَتَّى رَأَيْتُ الْمَطَرَ يَتَحَادَرُ عَلَى لِحْيَتِهِ ، قَالَ فَمُطِرْنَا يَوْمَنَا ذَلِكَ ، وَفِى الْغَدِ وَمِنْ بَعْدِ الْغَدِ وَالَّذِى يَلِيهِ إِلَى الْجُمُعَةِ الأُخْرَى ، فَقَامَ ذَلِكَ الأَعْرَابِىُّ أَوْ رَجُلٌ غَيْرُهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ، تَهَدَّمَ الْبِنَاءُ وَغَرِقَ الْمَالُ ، فَادْعُ اللَّهَ لَنَا . فَرَفَعَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يَدَيْهِ وَقَالَ « اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا » . قَالَ فَمَا جَعَلَ يُشِيرُ بِيَدِهِ إِلَى نَاحِيَةٍ مِنَ السَّمَاءِ إِلاَّ تَفَرَّجَتْ حَتَّى صَارَتِ الْمَدِينَةُ فِى مِثْلِ الْجَوْبَةِ ، حَتَّى سَالَ الْوَادِى - وَادِى قَنَاةَ - شَهْرًا . قَالَ فَلَمْ يَجِئْ أَحَدٌ مِنْ نَاحِيَةٍ إِلاَّ حَدَّثَ بِالْجَوْدِ .
                                          
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ”நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!” என்று கூறினார்.

நபி(ஸல்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்தையும் நாங்கள் பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பாத்தேன்.

அன்றைய தினமும் அதற்கடுத்த நாளும் அதற்குமடுத்த நாளும் அதற்கு மறு ஜும்ஆ வரையிலும் எங்களுக்கு மழை பொழிந்தது. (மறு ஜும்ஆவில்) அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து ”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன. செல்வங்கள் மூழ்குகின்றன. கால்நடைகள் அழிகின்றன. எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!” என்றார்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி ”இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களை நோக்கி (இதை அனுப்புவாயாக!) எங்களுக்குக் கேடு தருவதாக (இம்மழையை) ஆக்கி விடாதே!" என்று கூறினார்கள்.

மேகம் உள்ள பகுதியை நோக்கி நபி(ஸல்) அவர்கள் சைகை செய்த போதெல்லாம் அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா நகர் பெரும் பள்ளமாக மாறியது. (இம்மழையால்) 'கனாத்' எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது. பல்வேறு பகுதிகளிலிருந்து வருபவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலிருந்ததில்லை.

                                                            ( நூல்: புகாரி )

அல்லாஹ் மனித சமூகத்திற்கு வழங்கியிருக்கிற எந்த ஒரு அருட்கொடையும் மனித சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் நோக்கில் படைக்கப்படவில்லை.

அப்படி ஒரு அருட்கொடையைக் கொண்டு கேடு விளையுமானால் அதற்கு மனித சமூகமே முழுமுதற் காரணமாகும் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.

ظَهَرَ الْفَسادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِما كَسَبَتْ أَيْدِي النَّاسِ

“மனித சமூகம் தங்கள் கரங்களால் எதைச் சம்பாதிக்கின்றார்களோ அதன் காரணமாகவே தரையிலும் ( நிலத்திலும் ) கடலிலும் அராஜகமும், குழப்பமும் தோன்றுகின்றன”. ( அல்குர்ஆன்: 30: 41 )

இப்போது தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் கடலூரில் வெள்ள நீர் இன்னும் வடியாமல் தேங்கி நிற்கிறது என்றால் அதற்கு காரணம் நீர் செல்ல வேண்டிய பாதை தடை பட்டிருக்கின்றது.

ஆம்! ஒரு காலத்தில் குளங்களாகவும், ஏரிகளாகவும், கண்மாய்களாகவும் இருந்தவைகள் இன்று மக்களின் குடியிருப்புக்களாக மாறிவிட்டன.

குடியிருப்புக்களை கட்டும் முன் மழை காலத்தின் தண்ணீர் செல்வதற்கான பாதைகள், ஓடைகள், வடிகால்கள், மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் போன்றவற்றை அமைத்திருக்க வேண்டும்.

மக்களும், அரசும் கண்டு கொள்ளாமல் இருந்ததனால் இன்று மிகப் பெரிய சேதாரத்திற்கு மக்கள் ஆளாகி இருக்கின்றார்கள்.

எப்படி சமாளிப்பது என மக்களோடு சேர்ந்து அரசும் அதிகாரிகளும் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

1. முழு முயற்சி வேண்டும்.

மனித வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழ வேண்டுமானாலும் கூட அதற்கு மனித முயற்சி மிகவும் அவசியம் என்கிறது அல்குர்ஆன்.

அல்லாஹ்வின் அற்புதத்தை வயிற்றில் சுமந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மர்யம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் உணவளிக்க முன்வந்த போது வெறுமெனே அதியசத்தை உண்டு பண்ண விரும்பவில்லை. மாறாக, அதற்காக அவர்களுடைய முயற்சி எனும் பங்களிப்பைத் தரச் சொன்னான்.

فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهِ مَكَانًا قَصِيًّا (22) فَأَجَاءَهَا الْمَخَاضُ إِلَى جِذْعِ النَّخْلَةِ قَالَتْ يَا لَيْتَنِي مِتُّ قَبْلَ هَذَا وَكُنْتُ نَسْيًا مَنْسِيًّا (23) فَنَادَاهَا مِنْ تَحْتِهَا أَلَّا تَحْزَنِي قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا (24) وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا (25) فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا

“பின்னர், மர்யம் அக்குழந்தையைக் கர்ப்பம் தரித்தார். கர்ப்பத்தோடு அவர் தொலைவான ஒர் இடத்திற்கு ஒதுங்கிச் சென்றார். பிரசவ வேதனை அவரை ஒரு பேரீச்சை மரத்தடியின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது.

அப்போது, அவர் “அந்தோ! நான் இதற்கு முன்னரே மரணமடைந்து முற்றிலும் மறக்கடிக்கப்பட்டுப் போயிருக்கக் கூடாதா?” என்று கூறலானார். அப்பொழுது, கீழே இருந்து ஒரு வானவர் அவரை அழைத்துக் கூறினார் ”நீர் கவலைப் படாதீர்! உம் இறைவன் உமக்குக் கீழே ஒரு நீரூற்றை அமைத்துள்ளான்.

மேலும், பேரீச்சை மரத்தின் அடிப்பகுதியைப் பிடித்துச் சற்று உலுக்கும், அது உம்மீது புத்தம் புதிய பேரீச்சம் பழங்களை உதிர்க்கும். ஆக, நீர் புசித்தும் பருகியும் கண் குளிர்ந்திருப்பீராக!”. ( அல்குர்ஆன்: 19: 22 – 26 )

மூஸா (அலை) அவர்களின் சமூகம் தண்ணீர் இன்றி தவித்த போது அல்லாஹ்விடம் மூஸா (அலை) பிரார்த்தித்தார்கள். அவர்களுக்கு அல்லாஹ் தண்ணீர் தர முன் வந்த போது வெறுமெனே அதியசத்தை உண்டு பண்ண விரும்பவில்லை. மாறாக, அதற்காக அவர்களுடைய முயற்சி எனும் பங்களிப்பைத் தரச் சொன்னான்.

وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا

”இன்னும், மூஸா தம் சமூகத்தினருக்காக தண்ணீர் வேண்டி பிரார்த்தித்ததையும் நினைவு கூறுங்கள். அப்போது “உம்முடைய கைத்தடியைக் கொண்டு இந்தக் கல்லின் மீது அடிப்பீராக!” என்று நாம் கூறினோம். அவ்வாறு அவர் அடித்ததும் அதிலிருந்து பன்னிரெண்டு ஊற்றுகள் பொங்கி எழுந்தன”. ( 2: 60 )

فَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنِ اضْرِبْ بِعَصَاكَ الْبَحْرَ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ (63) وَأَزْلَفْنَا ثَمَّ الْآخَرِينَ (64) وَأَنْجَيْنَا مُوسَى وَمَنْ مَعَهُ أَجْمَعِينَ (65)

இது போன்றே ஃபிர்அவ்னின் பிடியிலிருந்து தப்பித்துச் சென்ற போது கடல் நீர் குறுக்கிடவே மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் கைத்தடியைக் கொண்டு கடலில் அடிக்குமாறு கட்டளை பிறப்பித்தான். ( பார்க்க, அல்குர்ஆன்: 26: 60 – 66 )

ஆக, மனித வாழ்க்கையில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து விடுபட்டு வெளியே வர வேண்டுமானால் முழுமையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை மேற்கூறிய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

2. சரியான திட்டமிடல் வேண்டும்.

மதீனாவை போர் மேகம் சூழ்ந்திருந்த தருணம் அது. எதிரிகள் மதீனாவிற்குள் நுழைந்து விட்டால் உயிழப்புகளும், சேதங்களும் பன்மடங்கு பெருகி விடும் அபாயகரமான சூழ்நிலை.

ஆம்! ஹிஜ்ரி 5 –ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் 10000 பேர் கொண்ட பெரும் படை ஒன்று மதீனாவைத் தாக்கி முஸ்லிம்களை கொன்று குவிக்க வேண்டும் என்கிற முனைப்போடு வருகின்றார்கள் என்கிற செய்தி தான் இதற்கு காரணம்.

இதுவரை இல்லாத ஒரு வித பதற்றமும், அச்ச உணர்வும் முஸ்லிம்களை ஆட்கொண்டிருந்தது. ஏனெனில், இதுவரை எதிரிகள் வெளியே இருந்து வந்தனர். ஆனால், இப்போதோ எதிரிகளோடு கைகோர்த்திருப்பவர்கள் மதீனாவின் பூகோளத்தை முழுவதுமாக அறிந்து வைத்திருந்த மதீனாவின் யூதர்கள்.

என்ன செய்வது? எப்படி போர்முனையை சமாளிப்பது? பெரும் சேதத்தை எப்படி தவிர்ப்பது? இப்படி நிறைய எப்படி பெருமானார் {ஸல்} அவர்களின் மின் கேள்விகள் தொக்கி நின்றது.

அல்லாஹ்வும் இப்படி பதிவு செய்திருப்பான்:

هُنَالِكَ ابْتُلِيَ الْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا زِلْزَالًا شَدِيدًا ()

“அந்தக் கடினமான நேரத்தில் இறைநம்பிக்கையாளர்கள் நன்கு சோதிக்கப் பட்டார்கள். மேலும், கடுமையாக அலைக்கழிக்கப்பட்டார்கள்”. ( அல்குர்ஆன்: 33: 11 )

ولو بلغت هذه الأحزاب والمحزبة والجنود المجندة إلى أسوار المدينة بغتة لكانت أعظم خطراً على كيان المسلمين مما يقاس، وربما تبلغ إلى استئصال الشأفة وإبادة الخضراء، ولكن قيادة المدينة كانت قيادة متيقظة، لم تزل واضعة أناملها على العروق النابضة، تتجسس الظروف، وتقدر ما يتمخض عن مجراها، فلم تكد تتحرك هذه الجيوش عن مواضعها حتى نقلت استخبارات المدينة إلى قيادتها فيها بهذا الزحف الخطير .
وسارع رسول الله صلى الله عليه وسلم إلى عقد مجلس استشاري أعلي، تناول فيه موضوع خطة الدفاع عن كيان المدينة، وبعد مناقشات جرت بين القادة وأهل الشوري اتفقوا على قرار قدمه الصحابي النبيل سلمان الفارسي ضي الله عنه .
قال سلمان : يا رسول الله، إنا كنا بأرض فارس إذا حوصرنا خَنْدَقْنَا علينا . وكانت خطة حكيمة لم تكن تعرفها العرب قبل ذلك .
وأسرع رسول الله صلى الله عليه وسلم إلى تنفيذ هذه الحظة، فوكل إلى كل عشرة رجال أن يحفروا من الخندق أربعين ذراعاً، وقام المسلمون بجد ونشاط يحفرون الخندق، ورسول الله صلى الله عليه وسلم يحثهم ويساهمهم في عملهم هذا .

பரபரப்பான சூழ்நிலையில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களில் முக்கியமானவர்களை உடனடியாக மஸ்ஜிதுன் நபவீயில் ஒன்று கூடுமாறு ஆணை பிறப்பித்தார்கள்.

மஸ்ஜிதுன் நபவீ அப்படியொரு அமைதியை அன்று வரை சந்தித்தது இல்லை. அமைதி என்றால் அப்படியொரு அமைதி. முக்கிய நபித்தோழர்களெல்லாம் அண்ணலாரை சூழ்ந்து அமர்ந்திருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நிலவிய அமைதிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக “தோழர்களே! நிலைமையை நீங்கள் மிகவும் அறிந்திருப்பீர்கள் என நான் கருதுகின்றேன்! நல்லதொரு ஆலோசனையை நல்குங்கள்!” என்று பேச்சை ஆரம்பித்தார்கள்.

நபித்தோழர்கள் ஒருவர் பின் ஒருவராக தங்களின் அறிவினிற் சிறந்த ஆலோசனைகளை பெருமானார் {ஸல்} அவர்களிடம் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். மாநபி {ஸல்} அவர்களும் மிகவும் உன்னிப்பாக அவைகளை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஸல்மான் ஃபார்ஸி (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பாரசீக நாட்டில் இருந்த போது எங்களை எதிரிகள் தாக்க வரும் போது எங்களைச் சுற்றி அகழ் தோண்டிக் கொள்வோம். அவ்வாறே இங்கும் செய்யலாம்” என்று கூறினார்கள்.

இது நாள் வரை இப்படியானதொரு திட்டத்தை அறிந்தவர்களாக அரேபியர்கள் இல்லாததன் காரணமாக மாநபி {ஸல்} அவர்கள் அகழ் குறித்து முழுமையாகக் கேட்டு அறிந்து கொண்டு, அதை அங்கீகரித்து அதை நிறைவேற்ற 40 முழம் அகழ் தோண்ட 10 பேர் கொண்ட ஒரு குழுவாக பல குழுக்களை நபி {ஸல்} அவர்கள் நியமித்து தாங்களும் பங்கேற்றார்கள்.

இறுதியாக, அல்லாஹ் மபெரும் வெற்றியை முஸ்லிம்களுக்கு வழங்கினான். பெரும் அழிவிலிருந்து, மிகப் பெரிய சேதாரத்திலிருந்து முஸ்லிம்கள் தங்களைக் காத்துக் கொள்ள அகழ் பெரிதும் உதவியது.

وهذه الغزوة في الحقيقة امتداد لغزوة حنين، وذلك أن معظم فلول هَوَازن وثَقِيف دخلوا الطائف مع القائد 
العام ـ

"மழை பொழியட்டும் தமிழ்நாடு தழைக்கட்டும்" விண்ணிலிருந்து வரும் மழையால் உலகம் இயங்கி வருவதலால் அது அழியா வாழ்வை நல்கும் அமிழ்தத்திற்கு இணையானது என்பதை
உணர வேண்டும். 
நன்மை செய்யும் நன்மக்களாக இருப்பின் 
அருள் மழை,
பாவங்கள் செய்ய செய்ய 
அழியும் மழை.
யா அல்லாஹ்!எங்களுக்கு அருள் மழையை தருவாயாக!
மழை வேண்டி துஆ  
 اللهم اسقنا غيثاً مغيثاً مريئاً مَريعاً نافعاً غير ضار ، غير آجل
யா அல்லாஹ்! உதவியாக இருக்கக்கூடிய செழிப்படையச் செய்யக்கூடிய, பச்சை பசுமையை ஏற்படுத்தக்கூடிய இடறு செய்யாத பலன் தரக்கூடிய மழையாக தாமதமின்றி துரிதமாக எங்களுக்கு மழை பெய்யச் செய்வாயாக!
 மழை பெய்கின்ற போது 
 اللهم صبيا نافعا 
பயன் தரக்க்கூடிய மழையாக யா அல்லாஹ் (நீ ஆக்கி வைப்பாயாக!)
இடி இடிக்கின்றபோது 
 سُبحانَ الذي يُسبّحُ الرعدُ بحمدهِ والملائكةُ من خِيفتهِ
அவன் தூயவன் எத்தகையவென்றால் அவனின் புகழைக்கொண்டு இடி துதிக்கிறது. மற்றும் வானவர்கள் அவனின் பயத்தால் துதிக்கின்றனர். நூல்: முஅத்தா 2/992
காற்று வீசுகின்றபோது
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا
யா அல்லாஹ்! நிச்சயமாக அ(க் காற்றான)தன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன்; அதன் தீமையிலிருந்தும் உன்னைக் கொண்டு காவல் தேடுகறேன்.
நூல்கள் அபூ தாவூது

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன் 

Popular posts from this blog

ஈஸா (அலை) செய்த அற்புதங்களும் நாம்பெறவேண்டிய படிப்பினைகளும். 23-12_22

குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்களும்,அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்… 13-06-2024

பைத்துல் முகத்தஸ்