ஏழைகளுடன் நாம் ஈதுல் ஃபித்ரு 2025
- Get link
- X
- Other Apps
ஈதுல் ஃபித்ர் – ஈகைத் திருநாள் சிந்தனை - 2025-. ஏழைகளுடன் நாம்?!
ஈதுல் ஃபித்ர் – ஈகைத் திருநாள் சிந்தனை - 2025-.
ஏழைகளுடன் நாம்?!
இறைவன் மனிதனுக்கு வாழும் நாட்களில் மகத்தான பல நாட்களை மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக வெகுமதியாக வழங்கி இருக்கின்றான்.
அந்த நாட்களில் மிகவும் உயர்ந்த நாட்கள் தாம் இரண்டு ஈதுடைய ( ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா ) நாட்கள் ஆகும்.
அத்தகைய மகத்தான இரண்டு ஈதுகளில் ஒன்றான ஈதுல் ஃபித்ர் உடைய தினத்தில் நாம் மகிழ்ச்சியோடு அல்லாஹ்வின் பள்ளியில் அமர்ந்திருக்கின்றோம்.
ஈத் என்றாலே ஈகை தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு சக மனிதனுக்கும், சக முஸ்லிம் சகோதரனுக்கும் ஈகையோடு வாழுமாறு இஸ்லாம் வலியுறுத்துவதைப் பார்க்க முடிகின்றது.
ஈகையை, மனித நேயப் பண்பை இஸ்லாம் இந்த உலகில் கூறியது போல வேறெந்த சமயங்களும் கூறியது கிடையாது.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இது போன்ற மகிழ்ச்சியான பல ஈதுத் திருநாளை தந்து, ஈகையோடு, பிறருக்கு ஈந்து வாழ்கிற நற்பேற்றை நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக!
முதலில் நாம் அல்லாஹ்வின் சோபனத்தைப் பெற்று ஆனந்தம் அடைவோம்.
இப்போது நாம் ஈதுல் ஃபித்ர் தொழுகையைத் தொழுவதற்காக காத்திருக்கின்றோம். இந்த தருணம் நம் வாழ்வில் மிகவும் முக்கியமான தருணமும் கூட.
உலகில் எங்கெல்லாம் ஈதுல் ஃபித்ர் தொழுகைக்காக மக்கள் ஒன்று கூடுகின்றார்களோ அங்கெல்லாம் மகத்துவமும் கீர்த்தியும் வாய்ந்த ஒருவனுக்கும், பரிசுத்தமான ஒரு கூட்டத்தினருக்கும் இடையே ஒரு உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது.
அந்த உரையாடல் யாரைப் பற்றி தெரியுமா? பகலெல்லாம் பசித்திருந்து நோன்பு நோற்ற, இரவெல்லாம் விழித்திருந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட்ட அடியார்கள் குறித்து, ஆம்! உங்களையும் என்னையும் குறித்து தான்.
யார் உரையாடுகின்றார்கள் தெரியுமா? மகத்துவமும் மாண்பும் நிறைந்த நம்மைப் படைத்த அல்லாஹ், யாரிடம் உரையாடுகிறான் தெரியுமா? படைக்கப்பட்ட படைப்புகளிலேயே மிகவும் பரிசுத்தமான படைப்பான வானவர்களிடம் உரையாடுகின்றான். என்ன உரையாடுகிறான் தெரியுமா?, நமது உயிருக்கு உயிரான உயிரினும் மேலான நமது நபி ﷺ அவர்கள் சொல்ல நாம் கேட்போம்.
துல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் அன்று அல்லாஹ் வானவர்களைஒவ்வொரு ஊருக்கும் அனுப்பி வைக்கிறான் . அவர்கள் ஒவ்வொரு தெருக்கோடியிலும் நின்று கொள்கிறார்கள் . முஹம்மதுவின் ﷺ – சமுதாயத்தோரே ! கண்ணியவானான இறைவன் பால் வாருங்கள் ; அவன் கணக்கற்ற செல்வங்களை உங்களுக்கு இன்று வழங்க இருக்கிறான் . எண்ணற்ற பாவங்களை மன்னிக்கவிருக்கிறான் . வாருங்கள் ! வாருங்கள் ! என்று குரல் கொடுக்கிறார்கள் . மக்கள் தொழுமிடத்தில் கூடும் போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வானவர்களிடம் "ஒரு பணியாள் தனது பணியை நிறைவு செய்து விட்டதால் அவனுக்குரிய கூலி என்னவாக இருக்கும்?" என்று கேட்கிறான் .
எங்கள் இறைவா! அந்தப் பணியாளுக்கு வாக்களிக்கப்பட்ட கூலியை முழுமையாகக் கொடுத்து விடுவது தான் முறையாகும் என்று வானவர்கள் பதிலளிப்பார்கள் .
அதற்கு, அல்லாஹ் அனைத்து வானவர்களையும் பார்த்து கூறுவான்:-
எனது வானவர்களே! நீங்கள் சாட்சியாக இருங்கள் . எனது அடியார்கள் ரமலான் மாதம் பகற்காலங்களில் நோன்பிருந்து, இரவுக்காலங்களில் விழித்திருந்து என்னைத் தொழுததற்காக "எனது மன நிறைவையும் , எனது மன்னிப்பையும் நான் அவர்களுக்குக் கூலியாக வழங்குகிறேன் !
பின்னர் அடியார்களை நோக்கி அல்லாஹ் கூறுகிறான். ”எனது அடியார்களே! என்னிடம் கேளுங்கள்! எனது கண்ணியத்தின் மீதும், எனது மகத்துவத்தின் மீதும் ஆணையாக! இந்த சபையில் வைத்து மறு உலக நற்பாக்கியங்களில் எதை நீங்கள் என்னிடம் கேட்டாலும் நான் உங்களுக்கு அதைத் தருவேன்! நீங்கள் இவ்வுலக பாக்கியங்களில் எதைக் கேட்டாலும் அவற்றையும் உங்கள் கண் முன்னாலேயே காட்டுவேன் .
எனது கண்ணியத்தின் மீது ஆணையாக! உங்களின் தவறுகள் உலகிற்கு தெரியாவண்ணம் நான் மறைத்து விடுவேன். எனது கண்ணியத்தின் மீதும், எனது கம்பீரத்தின் மீதும் ஆணையாக! உங்களுக்கு கண்ணிய குறைவு ஏற்படுவதை ஒரு போதும் நான் அனுமதிக்க மாட்டேன் . தண்டனை பெறுபவர்கள் மத்தியில் உங்களுக்கு தரக்குறைவை ஏற்படுத்த மாட்டேன். இதோ! நீங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் எனக்கு மனநிறைவை ஏற்படுத்தி விட்ட நிலையில் இங்கிருந்து திரும்புங்கள் .
அல்லாஹ்வின் கூற்றைச் செவிமடுத்த வானவர்கள் மிக மகிழ்ச்சியடைகிறார்கள். நோன்பிருந்து பெருநாள் கொண்டாடிய அடியார்களுக்கு வானவர்கள் வாழ்த்துக் கூறுகிறார்கள். அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ( ரலி ) ( நூல் : பைஹகி )
அல்லாஹ்வின் சோபனத்தைப் பெற்றுக் கொண்டதால் ஏற்படும் இந்த மகிழ்ச்சியை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் என்றென்றும் நமக்கு நிரந்தரமாக்கி வைப்பானாக!
இந்த ஈதுல் ஃபித்ர் தொழுகைக்கு வரும் முன்பாகவே நமது மார்க்கம் நமக்கு கடமையாக்கிய ஸதகத்துல் ஃபித்ரை வழங்கி நாம் இங்கே தொழுகைக்கு வந்திருக்கின்றோம்.
இந்த செய்தி நமக்கு தரும் சிந்தனையும் படிப்பினையும் இரண்டு.
ஒன்று, படைத்த ரப்பை மகிழ்விக்க வரும் முன்பாக நம்மில் பலவீனமானவர்களை மகிழ்வித்து விட்டு வருவது!
இரண்டு, படைத்த ரப்புல் ஆலமீன் முன்பாக நிற்கும் முன்னர் நமது (பாவ) அழுக்குகளை விட்டும் தூய்மையாக்கி விட்டு வந்து நிற்பது!
பொதுவாகவே அல்லாஹ் தமக்கு முன்பாக நிற்கும் அடியான் தூய்மையான நிலையில் நிற்க வேண்டும் என்பதை நியதியாகவே அமைத்துள்ளான் என்பதை அல்குர்ஆன் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கலீமுல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வை கூறும் போது அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களுக்கு இட்ட கட்டளை மிகவும் கவனத்திற்கு உரியதாகும்.
اِنِّىْۤ اَنَا رَبُّكَ فَاخْلَعْ نَـعْلَيْكَ اِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى
“நிச்சயமாக நான் தான் உம்முடைய இறைவன்; நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் “துவா” என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். ( அல்குர்ஆன்: 20: 12 )
அசுத்தங்களை சுமக்கும் காலணிகளை கழற்றச் சொன்னான். இந்த இறைவசனத்தின் ஊடாக அல்லாஹ் நமக்கு உணர்த்தும் பாடமும், படிப்பினையும் என்ன?
ஆம்! தூய்மையான, புனிதமான, பரிசுத்தமான ஒன்றை நாம் அணுகும் முன்பாக நாம் முதலில் நம்முடன் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குகளை நம்மை விட்டும் தூரமாக்க வேண்டும்.
தீய குணங்களில் இருந்து தூரமாக வேண்டும். பாவ அழுக்குகளை விட்டும் விலக வேண்டும்.
عن ابن عباس رضي الله عنهما قال: "فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرةً للصائم من اللغو والرفث، وطعمةً للمساكين" (رواه أبو داود،
ஸதகத்துல் ஃபித்ரின் நோக்கம் குறித்து மாநபி (ஸல்) அவர்கள் கூறும் போது
ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: பெருமானார் ﷺ அவர்கள் ஃபித்ரா ஜகாத்தை நோன்பாளியின் நோன்பை வீண் பேச்சு, வீண் செயல்களை விட்டும் சுத்தப்படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாகவும் (அல்லாஹ்வின் கட்டளையின் பிரகாரம்) கடமையாக்கினார்கள்.
قال رسول الله صلى الله عليه وسلم: من أداها قبل الصلاة فهي زكاة مقبولة، ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات. أخرجه أبو داود.
எனவே எவர் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே அதனை நிறைவேற்றுகின்றாரோ அது ஒப்புக் கொள்ளப்பட்ட ஜகாத்தாக ஆகும். எவர் தொழுகைக்குப் பின் அதனை நிறைவேற்றுகிறாரோ அது பொதுவான தர்மங்களில் ஒரு தர்மமாக ஆகும். (அபூதாவூத் : 1609)
இந்த ஹதீஸில் ஸதகதுல் ஃபித்ர் கடமையானதற்கான இரு நோக்கங்களை கூறப்பட்டுள்ளது. 1. நோன்பில் ஏற்பட்ட குறைகளுக்கான பரிகாரம், 2. சமுதாயத்தினரின் ஏழைகளும் பெருநாள் அன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் உணவிற்கான ஏற்பாடு.
أخرجه البيهقي والدار قطني عن ابن عمر قال ( فرض رسول الله ﷺ زكاة الفطر وقال : أغنوهم في هذا اليوم ) وفي رواية للبيهقي ( أغنوهم عن طواف هذا اليوم )
எனவே தான் மற்றொரு ஹதீஸில் பெருமானார் ﷺ அவர்கள் “இன்றைய நாளில் ஏழைகளை (யாசகத்தை விட்டும்) தேவையற்றவர்களாக்குங்கள்” ( தார குத்னீ ) என்று நவின்றுள்ளார்கள்.
ஏழைகள் யார்?.
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا الْمُغِيرَةُ يَعْنِي الْحِزَامِيَّ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ الْمِسْكِينُ بِهَذَا الطَّوَّافِ الَّذِي يَطُوفُ عَلَى النَّاسِ فَتَرُدُّهُ اللُّقْمَةُ وَاللُّقْمَتَانِ وَالتَّمْرَةُ وَالتَّمْرَتَانِ قَالُوا فَمَا الْمِسْكِينُ يَا رَسُولَ اللَّهِ قَالَ الَّذِي لَا يَجِدُ غِنًى يُغْنِيهِ وَلَا يُفْطَنُ لَهُ فَيُتَصَدَّقَ عَلَيْهِ وَلَا يَسْأَلُ النَّاسَ شَيْئًا
“ஓரிரு கவளம் உணவை, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களைப் பெறுவதற்காக மக்களைச் சுற்றி வருபவன் ஏழையல்லன்” என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறினார்கள். மக்கள், “அப்படியானால் ஏழை என்றால் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு, “(அடிப்படைத்) தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் பொருளாதாரம் அற்றவனாக இருப்பான்; அவனது நிலையறிந்து தர்மம் வழங்கப்படுவதில்லை. தானும் வலியச் சென்று மக்களிடம் கேட்கமாட்டான் (அவனே உண்மையான ஏழை)” என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ விடையளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
لِلْفُقَرَآءِ الَّذِيْنَ اُحْصِرُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ لَا يَسْتَطِيْعُوْنَ ضَرْبًا فِى الْاَرْض يَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِيَآءَ مِنَ التَّعَفُّفِ تَعْرِفُهُمْ بِسِيْمٰهُمْ لَا يَسْــٴَــلُوْنَ النَّاسَ اِلْحَــافًا وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ
பூமியில் நடமாடி (தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு, அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும்; (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக்கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான். ( அல்குர்ஆன்: 2: 273 )
அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இருவரும் ஃபுகரா, என்பதற்கும் மஸாகீன் என்பதற்கும் ஒரே மாதிரியான பொருளையே தந்திருக்கின்றனர்.
ஃபுகரா" மற்றும் "மஸாகீன்" என்பதன் அர்த்தத்தில் அறிஞர்கள் வேறுபட்டுள்ளனர்.
பெரும்பாலான அறிஞர்கள், "ஃபகீர்" ("ஃபுகரா" என்பதன் ஒருமை வடிவம்) மற்றும் "மிஸ்கீன்" ("மஸாகீன்" என்பதன் ஒருமை வடிவம்) ஆகிய இரண்டு சொற்களும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டவை என்று கருதுகின்றனர்.
இரண்டு சொற்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.
1) ஃபகீர் என்பவர் எதுவும் சொந்தமில்லாதவர். மிஸ்கீனிடம் சில பொருட்கள் உள்ளன, ஆனால் அது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. இது ஷாஃபி மத்ஹபின் கருத்து.
2) இதற்கு நேர்மாறானது ஹனஃபி மத்ஹபின் கருத்து.
3) ஃபக்கீர் என்பவர் தனது அடிப்படைத் தேவைகளில் பாதியை பூர்த்தி செய்ய முடியாதவர். மிஸ்கீனிடம் தனது தேவைகளில் குறைந்தது பாதியையாவது பூர்த்தி செய்ய போதுமான பொருட்கள் உள்ளன, ஆனால் அவற்றை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது. இது ஹன்பலி மத்ஹபின் கருத்து.
4) மிஸ்கீன் என்பவர் எதுவும் இல்லாதவர், மக்களிடம் உதவி கேட்பவர். ஃபக்கீர் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது, ஆனால் உதவி கேட்பதில்லை. இது மாலிக்கி மத்ஹபின் கருத்து.
ஒட்டுமொத்தமாக, இருவரில் ஒருவர் (பக்கீர் அல்லது மத்ஹபுகளின் கருத்துக்களைப் பொறுத்து மிஸ்கீன்) எதுவும் இல்லாதவர், மற்றொருவர் சில பொருட்களைக் கொண்டவர், ஆனால் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாதவர்கள் என்பதைச் சுற்றியே உருவாகிறது என்று நாம் கூறலாம்.
1) ஏழைகளின் சுபாவத்தில் வாழ்வது நபி வழியாகும்...
عَنْ أَبِي سَعِيدٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: اَللّهُمَّ أَحْيِنِي مِسْكِيناً، وَتَوَفَّنِي مِسْكِيناً، وَاحْشُرْنِي فِي زُمْرَةِ الْمَسَاكِينِ. (الحديث) رواه الحاكم وقال: هذا حديث صحيح الاسناد ولم يخرجاه ووافقه الذهبي:٤ /٣٢٢
யா அல்லாஹ்!, என்னை ஏழைகளின் சுபாவத்தில் வாழவைப்பாயாக! ஏழ்மையான நிலையில் உலகிலிருந்து என்னை மரணிக்கச் செய்வாயாக! ஏழைகளின் கூட்டத்தில் என்னை எழுப்புவாயாக!” என்று ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஸஈது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(முஸ்தத்ரக் ஹாகிம்)
فقد روى الترمذيُّ وصححه الألباني أَنَّ رَسُولَ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- قَالَ: "اللَّهُمَّ أَحْيِنِي مِسْكِينًا، وَأَمِتْنِي مِسْكِينًا، وَاحْشُرْنِي فِي زُمْرَةِ الْمَسَاكِينِ يَوْمَ القِيَامَةِ"، فعجبت عَائِشَةُ لهذا وقَالَتْ: لِمَ يَا رَسُولَ اللهِ؟! فقَالَ: "إِنَّهُمْ يَدْخُلُونَ الجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بِأَرْبَعِينَ خَرِيفًا او اربعين عاما ، يَا عَائِشَةُ: لاَ تَرُدِّي الْمِسْكِينَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، يَا عَائِشَةُ: أَحِبِّي الْمَسَاكِينَ وَقَرِّبِيهِمْ؛ فَإِنَّ اللَّهَ يُقَرِّبُكِ يَوْمَ القِيَامَةِ".
மேற்கூறியவாறு நபி ﷺ அவர்கள் துஆச் செய்ததைக் கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள் நபி ﷺ அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு துஆச் செய்கின்றீர்கள்? என்று ஆச்சரியத்துடன் வினவியதற்கு, நபி ﷺ அவர்கள் "ஏழைகள் தான் முதலில் சுவனம் செல்வார்கள். அவர்களின் செல்வந்தர்களுக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே!. என்று சொல்லி விட்டு, ஆயிஷாவே! ஏழைகள் ஏதேனும் கேட்டால் உம்மிடம் பேரீத்தம் பழத்தின் ஒரு துண்டு தான் இருக்கும் என்றாலும் அதைக் கொடுத்து விடு! அவர்களுக்கு எதுவும் கொடுக்காமல் விரட்டி விடாதே! ஆயிஷாவே! அவர்களை நேசிப்பாயாக! அவர்களின் சகவாசத்தை நெருக்கத்தில் வைத்திருப்பாயாக! நிச்சயமாக! அல்லாஹ் உன்னை நாளை மறுமையில் அவனது நெருக்கத்தைப் பெற வைப்பான்!" என்று கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )
2) ஏழைகளை நேசிப்பதும்... அவர்களுடன் நெருங்கிப் பழகுவதும்...
عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَحِبُّوا الْفُقَرَاءَ وَجَالِسُوهُمْ، وَأَحِبَّ الْعَرَبَ مِنْ قَلْبِكَ، وَلْتَرُدَّ عَنِ النَّاسِ مَاتَعْلَمُ مِنْ قَلْبِكَ. رواه الحاكم وقال: صحيح الاسناد ووافقه الذهبي:٤/٣٣٢
ஏழைகளை நேசியுங்கள் அவர்களுடன் அமருங்கள், அரபுகளை உள்ளத்தால் நேசியுங்கள், மற்றவர்களைக் குறை கூறுவதை விட்டும் உங்களுடைய குறை உங்களைத் தடுக்கட்டும்” (முஸ்தத்ரக் ஹாகிம்)
3) தீய மரணங்களைத் தடுக்க ஏழைகளைத் தேடிச் சென்று உதவி செய்ய வேண்டும்....
عَنْ حَارِثَةَ بْنِ النُّعْمَانِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مُنَاوَلَةُ الْمِسْكِيْنِ تَقِيْ مِيْتَةَ السُّوْءِ.
ஏழைகளுக்கு தனது கையால் தானம் வழங்குவது தீய மரணத்தைவிட்டும் பாதுகாக்கும்” ( நூல்: தபரானீ, பைஹகீ, ஜாமிஉஸ்ஸஙீர்)
4) மகத்தான பாக்கியம் கிடைக்கப் பெறுபவர்....
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم “ السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالْمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، أَوِ الْقَائِمِ اللَّيْلَ الصَّائِمِ النَّهَارَ ”.
(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்’. என நபி ﷺ அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )
5) ஏற்றத் தாழ்வு காரணமாக ஏழைகள் புறக்கணிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்....
مرّ رجلٌ على رسول الله صلى الله عليه وسلم فقال: «ما تقولون في هذا؟ قالوا: هذا حريٌ إن خَطَب أن يُنْكح، وإن شَفَع أن يُشَفّع، وإن قال أن يُسْتمع له. قال: ثم سكت، فمر رجل من فقراء المسلمين فقال: ما تقولون في هذا؟ قالوا: هذا حريٌ إن خَطَب أن لا يُنْكح، وإن شَفَع أن لا يُشَفّع، وإن قال أن لا يُسْتمع له، فقال رسول الله صلى الله عليه وسلم
«هذا خيرٌ من ملء الأرض من مثل هذا» «»
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களும், நபித்தோழர்கள் சிலரும் அமர்ந்திருந்த இடத்தை ஒரு மனிதர் கடந்து சென்றார்.
அப்போது, அண்ணலார் ﷺ ”இவர் மீதான உங்களின் அபிப்பிராயம் என்ன?” என்று வினவியதற்கு… நபித்தோழர்கள் “இவர் சுதந்திரமான ஒருவர், இவர் திருமணம் செய்ய பெண் கேட்டால், மணமுடித்து வைக்கப்படுவார். ஏதேனும் ஒரு விவகாரத்தில் இவர் பரிந்துரைத்தால் உடனடியாக இவரின் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும். அவர் ஏதாவது சொன்னால் செவி தாழ்த்தி மக்களெல்லாம் கேட்பார்கள்” என்று பதில் கூறினார்கள்.
இது கேட்ட மாநபி ﷺ அவர்கள், சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பின்னர் அண்ணலாரின் சபையைக் கடந்து சென்ற ஒரு ஏழை முஸ்லிமைக் குறித்து “இவரின் மீதான உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று வினவினார்கள்.
அதற்கு, நபித்தோழர்கள், “இவரும் ஒரு சுதந்திரமான மனிதர் தான், எனினும் இவர் பெண் கேட்டால் எவரும் கொடுக்க முன் வர மாட்டார்கள். இவர் பரிந்துரைத்தால் அது பரிசீலிக்கப்படவே மாட்டாது. இவர் பேச்சை எவரும் காது கொடுத்து கேட்கவும் மாட்டார்கள்” என பதிலளித்தனர்.
அப்போது, அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் “நீங்கள் முதலில் விமர்சித்த நபரை விடவும், நிரப்பமான இந்த பூமியை விடவும் இந்த ஏழை மனிதர் தான் மிகவும் சிறந்தவர்” என கூறினார்கள். ( நூல்: புகாரி )
عن أبي هريرة من قوله: بئس الطعام طعام الوليمة، يُدعى إليها الأغنياء، ويُترك الفقراء.
ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்படும் விருந்துகள் தான் மிக கெட்ட விருந்து என நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
நபி ﷺ அவர்கள் பயன்படுத்திய வாசகம் என்ன கருத்தைக் கூறுகிறது என்பதைப் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
ஏழைகள் விடப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்படுவதை நபி ﷺ அவர்கள் தடுத்தது ஏழைகளுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதை மட்டும் குறிக்காது. ஏற்ற தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பது தான் பிரதான காரணமாகும்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் “பனூ பயாளா எனும் கோத்திரத்தார்களிடம் நீங்கள் உங்கள் கோத்திரப் பெண்களில் ஒருவரை அபூ ஹிந்த் (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுங்கள்” என்று கூறினார்கள்.
அதற்கு அம்மக்கள் “உயர் குலத்துப் பெண்களான எங்களின் பெண்மக்களில் ஒருவரை எங்களிடம் சேவகம் செய்யும் அடிமை குலத்து வம்சத்தைச் சார்ந்த ஒருவருக்கு நாங்கள் திருமணம் செய்து கொடுக்க வேண்டுமா?” என்று கேட்டனர்.
அப்போது தான் அல்லாஹ் ஹுஜுராத் அத்தியாயத்தின் 13 –ஆவது வசனத்தை "மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; பின்னர், நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்: உங்களில் எவர் (அல்லாஹ்வை) மிகவும் அஞ்சுபவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன்.
இறக்கியருளினான். ( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ )
ஏழைகளின் உரிமைகளால் கவரப்பட்ட ஓமன் அரசர்கள்..
மாநபி ﷺ அவர்கள் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு துல்கஅதா மாதம் ஓமன் நாட்டு அரசர்களான ஜைஃபர் மற்றும் அப்துவுக்குக் கடிதம் ஒன்றை அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்களிடம் கொடுத்து அனுப்பினார்கள்.
இஸ்லாமிய அழைப்பு விடுக்க ஓமனுக்குச் சென்ற அமர் இப்னு ஆஸ்(ரலி) அவர்களிடம், அரசர் அப்து இஸ்லாத்தை பற்றி விரிவாகக் கேட்டார். “நபி ﷺ எதைச் செய்யும்படி ஏவுகிறார்? எதைச் செய்வதிலிருந்து தடுக்கிறார்?” என்று அப்து வினவினார். அதற்கு அமர்(ரலி) “அல்லாஹ்வுக்கு வழிபடவேண்டுமென ஏவுகிறார். அவனுக்கு மாறு செய்வதிலிருந்து தடுக்கிறார். பெற்றோருக்கு உபகாரம் செய்யவும், உறவினர்களைச் சேர்த்து வாழவும் சொல்கிறார். அநியாயம் செய்வது, அத்துமீறுவது, விபச்சாரம் செய்வது, மது அருந்துவது, கற்கள், சிலைகள், சிலுவைகள் ஆகியவற்றை வணங்குவது போன்ற அனைத்திலிருந்தும் தடுக்கிறார்” என்று விளக்கம் அளித்தார்.
அதற்கு அரசர் அப்து, “நல்ல விஷயமாகத்தான் இருக்கிறது ஆனால் என் சகோதரர் பதவி ஆசை கொண்டவர், எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டாரே” என்றார். “உங்கள் சகோதரர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவரையே அவரது கூட்டத்தினருக்கு அரசராக நியமித்து விடுவார்கள்.
மேலும், அந்தக் கூட்டத்தினரின் செல்வந்தர்களிடமிருந்து தர்மத்தைப் பெற்று அக்கூட்டத்தினரின் ஏழைகளுக்கே திரும்பக் கொடுத்து விடுவார்கள்” என்று அமர்(ரலி) விளக்கமளித்தபோது, ‘தர்மம்’ என்பதே அப்துவுக்குப் புதிதாக இருந்ததால் அதைப் பற்றியும் விளக்கம் கேட்டார். ஸகாத் என்கிற ஏழைவரி பற்றி அமர்(ரலி) விவரித்தார்கள்.
ஏழைவரி நல்ல விஷயமாக இருந்தாலும் தன் சகோதரர் அதனை ஏற்க மாட்டார் என்று அப்து சொல்லிவிட்டார். சிறிது நாட்கள் அங்கு தங்கிவிட்டு இஸ்லாமை அவர்கள் ஏற்கவில்லை என்றானதும் அங்கிருந்து அமர் (ரலி) புறப்பட இருந்த போது ஆழமாக யோசித்துப் பார்த்த அரசர்கள் மறுநாள் அமர் (ரலி) அவர்களை அழைத்து அரசர்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதாகவும், நபி (ஸல்) அவர்களை உண்மையாளராக ஏற்றுக் கொள்வதாகவும், ஜகாத் (ஏழை வரி) வசூலிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் உறுதி அளித்தனர். ( நூல்: ஆலமிய்யத்துல் இஸ்லாம் வரஸாயிலுன் நபிய்யி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் இலல் முலூக்கி வல் உமராஃ லி இமாமி முஹம்மது அமீன் ஷாக்கிர் ஹல்வானி )
இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொண்ட அன்றைய நாடுகளில் பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளின் மன்னர்கள் ஏழைகளுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள பொருளாதார உரிமைகளால் கவரப்பட்டு ஏற்றுக் கொண்டதாலும், அந்த பொருளாதார கடமைகளை நிறைவேற்றுவதில் மிகவும் சரியாக நடந்து கொண்டதாலும் இப்போது வரை அந்த இந்த இரண்டு நாடுகளிலும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நிறைவான பொருளாதாரத்தை வாரி வாரி வழங்கிக் கொண்டு இருக்கின்றான்.
கரிசனம் காட்டிய காருண்ய நபி ﷺ அவர்கள்....
روى أبو هريرة رضي الله عنه قال: بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ. قَالَ: «مَا لَكَ؟» قَالَ: وَقَعْتُ عَلَى امْرَأَتِي وَأَنَا صَائِمٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ تَجِدُ رَقَبَةً تُعْتِقُهَا؟» قَالَ: لاَ، قَالَ: «فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ»، قَالَ: لاَ، فَقَالَ: «فَهَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا». قَالَ: لاَ، قَالَ: فَمَكَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهَا تَمْرٌ - وَالعَرَقُ المِكْتَلُ - قَالَ: «أَيْنَ السَّائِلُ؟» فَقَالَ: أَنَا، قَالَ: «خُذْهَا، فَتَصَدَّقْ بِهِ» فَقَالَ الرَّجُلُ: أَعَلَى أَفْقَرَ مِنِّي يَا رَسُولَ اللَّهِ؟ فَوَاللَّهِ مَا بَيْنَ لاَبَتَيْهَا - يُرِيدُ الحَرَّتَيْنِ - أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِي، فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ، ثُمَّ قَالَ: «أَطْعِمْهُ أَهْلَكَ
ஒரு மனிதர் நபி ﷺ அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன் என்றார். உம்மை அழித்தது எது என நபி ﷺ அவர்கள் கேட்டார்கள். நான் ரமளானின் (பகல் நேரத்தில்) என் மனைவியுடன் உடல் உறவு கொண்டு விட்டேன் என்றார். அப்போது நபி ﷺ அவர்கள், ஒரு அடிமையை உரிமையிடுங்கள் என்றார்கள், அதற்கு எனக்கு சக்தி இல்லை என்றார். இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோருங்கள் என்றார்கள், அதை என்னால் தாங்கி கொள்ள முடியாது என்றார், அறுபது மிஸ்கீன்களுக்கு உணவளியுங்கள் என்றார்கள், அதற்கு எனக்கு சக்தி இல்லை என்றார், உட்காரு என்றார்கள் அவரும் உட்கார்ந்து விட்டார். அவ்வாறு அவர் உட்கார்ந்து இருக்கும் போதே அரக் என்று அழைக்கப்படும் (பேரீத்தம்பழ) கூடை கொண்டு வரப்பட்டது, இதைக் கொண்டு தர்மம் செய்யுங்கள் என நபி ﷺ அவர்கள் அவருக்கு கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ﷺ உங்களை உண்மையை கொண்டு அனுப்பியவன் (அல்லாஹ்வின்) மீது ஆணையாக! மதீனாவின் இரு மலைகளுக்கு மத்தியில் எங்களை விட மிகத் தேவையுள்ளவர்கள் இல்லை என்றார். இக்கூடையை எடுத்துக் கொண்டு உமது குடுப்பத்துக்கு உணவளியும் என்றார்கள் நபி ﷺ அவர்கள். ( நூல்: இப்னு மாஜா )
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் ஏழைகளின் உரிமைகளை வழங்கி, அவர்களின் கடமைகளை நிறைவேற்றி அவர்களுடன் நல்ல முறையில் நாம் நடந்திட நல்லருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
- Get link
- X
- Other Apps